கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 48 - ஒருதலைக்காதலாகவே இருந்திடுமா….!!!! - மீரா ராம்
என் முன்னே யாருடனோ கைகுலுக்கிய உன் கரங்கள்…
என் செவியில் விழுந்த உன் குரல்….
என் கால்கள் பின் தொடர்ந்திட்ட உன் பாதச்சுவடுகள்…
எதேச்சையாய் என்னருகில் நடந்து வந்த நீ…
அனைத்துமே இந்த நொடி வரை
திகட்ட திகட்ட நினைத்திடும் நனவாய்…
உள்நெஞ்சில் நிலைத்தாடும் ஊஞ்சலாய்….
மெய் சிலிர்த்திட செய்யும் தென்றலாய்…
மனமுருக செய்திடும் கானமாய்…
எனக்குள் நான் உணரும் உணர்வு பூக்கள்…
நான் மட்டுமே நுகரும் அவ்வாசம்
உன் நாசியை எட்டுவதும் எவ்வேளையடா?...
எப்பொழுதும் உன் நிழலாய் நான் வர காத்திருக்கும்
தருணமும் நீ உணர்வது எந்த நாளிலடா?...
என்ன சொல்லி என்ன செய்து
என் இதயத்தை நான் சமாதானம் செய்தாலும்
அது துடித்து முட்டி மோதி நிற்பது
உன் நினைவுச்சுவரில் தான்…
உன் மேல் நான் கொண்ட காதல்
உனக்கும் ஓர்நாள் தெரியவருமா?...
இல்லை இது ஒருதலைக்காதலாகவே இருந்திடுமா?...
பூ மலரும்…
{kunena_discuss:1088}