(Reading time: 1 - 2 minutes)

கவிதை - இந்தியனின் கனவு - சத்யா

Kolam 

கண்கவரும் அழகிய 
கோலங்களும் அமைதியும்
நிறைந்த சாலைகள்

நெரிசல் இன்றி
நேராக செல்லும்
அரசு பேருந்துகள்

கூட்டம் இன்றி 
தூய்மை நிறைந்த
தேசிய நெடுஞ்சாலைகள்

பயம் இன்றி
இன்பம் நிறைந்த
இனிய பயணங்கள்

அறியாமை இன்றி
புன்னகையுடன்
செல்லும் மாணவர்கள்

முற்றுப் புள்ளிப்பெற்று
முடிவு கொண்ட
கசக்கும் தீமைகள்

ஆடாமல் அசையாமல்
வேலை செய்ய
ஆயிரம் அறிவியல் சாதனங்கள்

உலகம் போற்ற 
உள்ளம் மகிழ
வளந்தது இந்தியா

ஆச்சரியமிகுந்த
மலர்ந்த முகத்துடன்
சிரித்தேன் நான்

தட்டி எழுப்பியதும்
அலறி எழுந்து
கனவை உணர்ந்தேன்

கனவு நினைவாகி
களிப்பே முகமாகும்
நாள் எந்நாளே
எதிர்பார்ப்பில் நாம்..

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.