கவிதை - இந்தியனின் கனவு - சத்யா
கண்கவரும் அழகிய
கோலங்களும் அமைதியும்
நிறைந்த சாலைகள்
நெரிசல் இன்றி
நேராக செல்லும்
அரசு பேருந்துகள்
கூட்டம் இன்றி
தூய்மை நிறைந்த
தேசிய நெடுஞ்சாலைகள்
பயம் இன்றி
இன்பம் நிறைந்த
இனிய பயணங்கள்
அறியாமை இன்றி
புன்னகையுடன்
செல்லும் மாணவர்கள்
முற்றுப் புள்ளிப்பெற்று
முடிவு கொண்ட
கசக்கும் தீமைகள்
ஆடாமல் அசையாமல்
வேலை செய்ய
ஆயிரம் அறிவியல் சாதனங்கள்
உலகம் போற்ற
உள்ளம் மகிழ
வளந்தது இந்தியா
ஆச்சரியமிகுந்த
மலர்ந்த முகத்துடன்
சிரித்தேன் நான்
தட்டி எழுப்பியதும்
அலறி எழுந்து
கனவை உணர்ந்தேன்
கனவு நினைவாகி
களிப்பே முகமாகும்
நாள் எந்நாளே
எதிர்பார்ப்பில் நாம்..
{kunena_discuss:779}