(Reading time: 1 - 2 minutes)

கவிதை - பசி தீர்த்த தாயவள்! - ரேவதிசிவா

Baby

பப்புக்கடைய சொல்லித்தந்தவளுக்கே

பப்புக்கடைந்தாள் அவள்!

வராத பெயரையெல்லாம்

வழிமொழிந்தாள் சைகையில்!

ஊரிலுள்ள அனைவருக்கும்

ஊட்டினாள்!

ஆ காட்ட சொன்னவள்

இதழில் வைத்தாள்!

அன்பையும் மகிழ்ச்சியையும்

அன்னமாய்!

நண்டுடனும்  நரியுடனும்

நகர்வலம் வந்த

வெற்று விரல்களின்

விசையிர்ப்பில்

சிக்கிக்கொண்டேன்!

தலை சாய்த்து கிளுக்கி சிரித்தவளின் புன்னகையில்

தீர்ந்தது!

மனதின் பசி!

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.