(Reading time: 1 - 2 minutes)

கவிதை - எனது நினைவுகளில்... - கிருஷ்ணா

சிறுவயதில்

பண்டிகை, விசேஷவீடுகளில்  திரையில் காட்டிய படங்கள்

 

ஒத்த வயது தோழிகளுடன்  திருட்டுத்தனமாய் சமைத்த கூட்டாஞ்சோறு

 

கிணற்றிலும் ஆற்றிலும் சலிப்பின்றி போட்ட ஆட்டம்

 

நுங்கும் இளநீரும் போட்டிபோட்டு சுவைத்த தருணம்

 

இலந்தை, பனம், கள்ளி, கோவப்பழமென மரங்களை சுற்றிய நாட்கள்

 

வைக்கோல் போரிலும் குட்டிச்சுவரிலும் மறைந்து விளையாடிய நேரங்கள்

 

மஞ்சள் நீரும் மாமன் முறை உறவுகளென களித்த திருவிழாக்கள்

 

பாண்டியும் தாயமும் சண்டை போட்டு விளையாடிய விடுமுறை நாட்கள்

 

வாங்கும் அடிகளையும் கிடைக்கும் திட்டுகளையும் நிமிடத்தில் மறந்து விடும் வயது

 

என  இன்று ஏங்க வைக்க போதுமானதாய் என் நினைவுகளில் .....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.