கவிதை - பாடம் - கார்த்திக் கவிஸ்ரீ
நீ முடித்து வைத்த காதலில்
என் காலம் தோன்றியது,
கவலைகள் பல இருந்தும்
கனவுகளை சுவாசித்தேன்,
உறவுகள் என்னோடு உறவாடிய போதும்
என் உணர்வுகளுடன் நான் உல்லாசம் கொண்டேன்,
இத்தனைக்கும் ஓர் அற்புத நிகழ்வாய் உந்தன் பிரிவு ஒன்றே!!!
காதலில் இழப்பதை விட கற்றுக்கொள்வதே அதிகம்..
நான் கற்றுக்கொண்டேன், வாழ்க்கையில் காலூன்றி நின்றேன்....