(Reading time: 2 - 3 minutes)

கவிதை - உறுதிமொழி ஏற்போம் - கார்த்திக் கவிஸ்ரீ

இயற்கை அன்னையை பாதுகாப்போம்,

செயற்கை விணையை அறவே ஒழிப்போம்,

உழைப்பால் மேலோங்குவோம்,

உள்ளத்தால் ஒன்றினைவோம்,

சாதி,மதத்தினை சங்கமித்து சமத்துவம் செய்வோம்,

எதிர்பார்ப்பின்றி அறம் செய்வோம்,

எதிர்நாட்டவருக்கும் பூங்கொத்து அனுப்புவோம்,

பக்கவிளைவில்லாத நாட்டு மருத்துவம் பழகுவோம்,

கலாச்சாரம் காத்து பழமையை பெறுவோம்,

தொழில் வளர்ச்சியில் நாகரீகம் பழகுவோம்,

அனாகரீக செயலுக்கு தண்டனையை கடுமையாக்குவோம்,

மனிதநேயமிக்க செயல்களை செய்வனே செய்வோம்,

விபத்தில் சிக்கியவரை புகைப்படம் எடுக்க முந்தாமல்,

புகைப்படம் தவிர்த்து உடனடி உதவிக்கரம் நீட்டுவோம்,

கையளவு கணினியால் வெளியுலகை மறந்தோம்,

தினம் முகம் பார்த்து பேசிய நண்பனை இன்று முகநூலில் தேடுகிறோம்,

பண்டமாற்று முறையை முறைபடி செய்து உழவனை உயர்த்துவோம்,

வாக்களிப்பு ஜனநாயக கடமை என்போம்,

வாக்குறுதியை கட்டாயம் நிறைவேற்ற சட்டம் இயற்றுவோம்,

இலவசம் என்னும் கானல்நீரை பெற்று பயனற்று இருக்கிறோம்,

இலவச மருத்துவம் நாடெங்கும் நடைமுறை படுத்துவோம்,

அனைவருக்கும் கல்வி என்பதை, பணத்துக்கு கல்வியாக மாற்றிவிட்டோம்,

கல்விக்கூடங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமாக்குவோம்,

உரிமைக்கு குரல்கொடுப்போம்,

எதிர்த்தால் அகிம்சையால் வெற்றி பெறுவோம்,

கலாம் ஐயாவின் கனவை நாம் பங்கெடுத்து நினைவாக்குவோம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.