கவிதை - போய்விடு நீ - இரா.இராம்கி
நுண்ணுயிரே நுண்ணுயிரே!
எங்கனம் பிறந்தாயோ?-
யாம் அறிந்திலோம்;
இன்னும் எத்தனை மனித உயிர்களை உட்கொள்வோயோ?
யாம் அறிந்திலோம்;
ஆனால் யாமறிவோம்-
இனி நிச்சயம் தாங்காது இவ்வுலகம்;
தவிக்கிறது இங்கு பல நெஞ்சம்;
இரக்கம் காட்டு கொஞ்சம்;
தண்டனைகள் போதும்
தவறுகள் உணர்ந்தோம்;
இனி மனிதம் காப்போம்
யாவுயிரும் புவியில் ஆனந்தமாய் வாழ எங்கள் பேராசைப்பேயைப் பொசுக்குவோம்;
நுண்ணுயிரே நுண்ணுயிரே ,
போதும் மரணஓலங்கள்,
மண்டியிட்டுக் கேட்கிறோம்,போய் விடு;
மன்றாடிக் கேட்கிறோம்,போய் விடு;
போய்விடு,போய்விடு நீ உடனே போய்விடு;
போய்விடு,போய்விடு நீ
உலகத்தை விட்டே போய்விடு.