(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நினைவுகள் - கோகுலப்ரியா

இரவும் பகலும் இருக்கும் வரை

என் கனவும் நினைவும் மறவாது

என் உடலும் உயிரும் இருக்கும் வரை

உன் நினைவு என்றும் மறையாது

 

உன்னோடு வாழ்ந்த நாட்களை விட

உன் நினைவோடு நான் வாழ்ந்த

நாட்களே மிக அதிகம்

 

பிரிந்து விடும் என்று தெரிந்தும்

மலரை சுமக்க செடி மறுப்பதில்லை

இறந்து விடுவோம் என்று தெரிந்தும்

நினைவுகளை சேகரிக்க மனம் மறப்பதில்லை

 

உறவுகள் என்னை விட்டு பிரிந்தாலும்

கனவுகள் என்னை விட்டு கலைந்தாலும்

உன் நினைவுகள் மட்டும் என்றும்

நீங்காதிருக்கும் என் நெஞ்சில்

 

மறந்தாலும் மறக்க முடியாதது காதல்

இறந்தாலும் இழக்க முடியாதது நட்பு 

 அழிந்தாலும் அழிக்க முடியாதது நினைவுகள் !!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.