(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நீ யார்…….. ? - கார்த்திக்

எங்கிருந்தோ

பாயும் தோட்டா ….

விழுந்து மடிவதெல்லாம்

என் ரேகையின் நீட்சி.

 

எண்களில்

1 4  4

தினமும்

புதிதாய் கனக்கிறது

 

கடைசியாய் பார்த்த

நண்பனின் ஸ்பரிசம்

கடைசியாய் போகுமோ?

 

புலப்படாத புள்ளிக்குள்

      நீ

எங்கு தான் வசிக்கிறாய் ?

 

கண்டதும்

சுட

உத்தரவு !

கண்டம் கடந்தாலும்

உன்

கண்டம் தப்பாது !

 

 

கொன்றுகுவித்த ஹிட்லர்

சர்வாதிகாரி என்றால்

நீ யார்…….. ?

 

 

நீர் நிலை தூய்மை,

கச்சா விலை சரிவு,

மாசின் மறைவு ,

யாருக்கு தேவை

மனிதன் அல்லாத  வளிமண்டலத்தில்

 

என் வெப்பத்தை கூட்டுகிறேன்

வந்து அமரு

பேசுவோம்.

 

மூச்சை திரைக்குள் அடைக்கிறேன்

முகமூடி கழட்டு,

விவாதிப்போம்

வுஹானில்   ஆரம்பித்து

யூ  எஸ் ஏ    வரை……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.