கவிதை - நீ யார்…….. ? - கார்த்திக்
எங்கிருந்தோ
பாயும் தோட்டா ….
விழுந்து மடிவதெல்லாம்
என் ரேகையின் நீட்சி.
எண்களில்
1 4 4
தினமும்
புதிதாய் கனக்கிறது
கடைசியாய் பார்த்த
நண்பனின் ஸ்பரிசம்
கடைசியாய் போகுமோ?
புலப்படாத புள்ளிக்குள்
நீ
எங்கு தான் வசிக்கிறாய் ?
கண்டதும்
சுட
உத்தரவு !
கண்டம் கடந்தாலும்
உன்
கண்டம் தப்பாது !
கொன்றுகுவித்த ஹிட்லர்
சர்வாதிகாரி என்றால்
நீ யார்…….. ?
நீர் நிலை தூய்மை,
கச்சா விலை சரிவு,
மாசின் மறைவு ,
யாருக்கு தேவை
மனிதன் அல்லாத வளிமண்டலத்தில்
என் வெப்பத்தை கூட்டுகிறேன்
வந்து அமரு
பேசுவோம்.
மூச்சை திரைக்குள் அடைக்கிறேன்
முகமூடி கழட்டு,
விவாதிப்போம்
வுஹானில் ஆரம்பித்து
யூ எஸ் ஏ வரை……