(Reading time: 9 - 18 minutes)

 

இதுவரை

மருத்துவம் பயின்ற க்ரிஷ்ணப்ரியாவும் அவளைவிட இரண்டு வயது இளையவளான வானதியும் ஆசிரம தோழிகள். மனித மிருகங்களினால் வேட்டையாடப்பட்டு ஒரு உயிரையும் பிறப்பிக்கச்செய்து இனி வாழ்வது சாத்தியமல்ல என்று தன் உயிரை துறக்கிறாள் வானதி. 

 

வானதியின் இழப்பு தன்னுடன் ஒரே கல்லூரியில் படித்த மூத்த மாணவனும் நந்தன் மருத்துவமனையின் முதலாளியுமான மீராநந்தனின் மேல் கோபமாய் திரும்புகிறது. ப்ரியாவை சமாளித்து அவளது கடைசி தின பயிற்சியையும் நிறைவு பெற வைத்தவன் தன் தந்தையுடன், வானதியின் இறுதி சடங்கையும் முடித்துவிட்டு அவளை தன்னுடனே அழைத்து செல்கிறான். 

 

தன் வீட்டில் நுழைய மறுத்தவளை தாயின் துணை கொண்டு சம்மதிக்க வைக்கிறான். வீட்டில் உள்ள அனைவரின் பாசத்தையும் கண்டு கண்கலங்குகிறாள் ப்ரியா. ப்ரியாவின் வாழ்வில் ஒரு பிடிப்பிற்காக நந்தனின் மருத்துவமனையிலே பணிபுரிய கட்டாயபடுத்தப்படுகிறாள். தனக்கு யாரும் தேவையில்லை தன்னை பார்த்துக்கொள்ள தனக்கு தெரியும் என்ற ரீதியில் நந்தனிடம் மீண்டும் கோபமுறுகிறாள். 

 

வானதியின் மகனையும் தன்னுடன் வளர்ப்பதாய் ப்ரியா கூற, குழந்தையை தனியாளாய் பார்த்துக்கொள்வது சிரமம் என்று மறுத்துவிடுகிறான் நந்தன். மருத்துவமனையில் தன்னுடைய பணியை முடித்துவிட்டு கோகுல கண்ணனை (வானதியின் மகன்) கொஞ்சிவிட்டு தாமதமாகவே வீட்டிற்கு செல்லும் ப்ரியாவின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொண்டே தன் இல்லம் திரும்புவான் நந்தன். 

 

இதற்கிடையில் நந்தனின் தங்கை யாழும், அவளது தோழி கொளசியும் தங்களுடைய பேசன் டிசைனிங் படிப்பை முடித்துக்கொண்டு சிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்ற பட்டத்துடன் வீடு திரும்புகிறார்கள். வீட்டிற்கு வந்ததில் இருந்து நந்தனிடம் காணும் மாற்றத்தினை உணர்ந்திருந்த யாழ் தன் அண்ணனிடம் பேச பெரிதும் முயன்று கொண்டிருந்தாள். க்ரிஷ்ணப்ரியாவின் ஒரு மாத பயிற்சி காலம் முடிவடைந்திருந்தது. 

 

அன்று இரவு மருத்துவமனையில் இருந்து வந்த நந்தனை வரவேற்றது யாழிசை தான். “என்ன யாழ் நீ இன்னும் தூங்காம என்ன பண்ற?” நந்தன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் “வா நந்து சாப்பிட போகலாம்...” என்ற யாழை பார்த்து முறைத்தான். “நான் சாப்பிட்றேன் நீ போய் தூங்கு டைம் ஆச்சு” என நந்தன் சொல்லிக்கொண்டிருக்க “இன்னும் யாரும் சாப்பிடல இன்னைக்கு பொளர்ணமில அது தான் நிலா சோறு சாப்பிடலாம்னு எல்லாரும் மாடில இருக்கோம் நீ ஃப்ரெஷ் ஆகிட்டு சீக்கிரம் வா” என்று எங்கோ பார்த்தபடி பதிலளித்தாள் யாழிசை. 

“சரி நீ போ… வரேன்” என்றவன் ஐந்து நிமிடத்தில் மாடியில் அவர்களுடன் அமர்ந்திருந்தான். 

 

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.