(Reading time: 8 - 15 minutes)
Aariloru pangu
Aariloru pangu

இந்த ஸத்தியம் நவீன பங்காளத்தாரை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்து மென்பது எனக்குத் தெரியும். இங்ஙனம் நான் ஆணையிட்டதிலிருந்து, அவருக்குக் கொஞ்சம் கோப முண்டாயிற்று.

“போமையா, மூட ஸந்யாஸி. என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்! இதோ உண்மை தெரிவிக்கிறேன். கேட்டுக்கொள்ளும். அந்தப் பெண் இங்கு நாம் சூத்திரர்களைப் பஞ்சத்திலிருந்து மீட்கப் பாடுபட்டதில் தீராத குளிர் ஜுரங் கண்டு, வைத்தியர்கள் சமீபத்தில் இறந்து விடுவாளென்று சொல்லிவிட்டனர். அதற்கு மேல், அவள் காசியிற் போய் இறக்க விரும்பியது பற்றி அசுவினி பாபு அவளைக் காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். உண்மை சொல்லி விட்டேன். போம்" என்றார்.

"காசிக்கா ?”

"ஆம்."

“காசியில் எந்தக் கட்டத்திலே?"

"அஸீ கட்டத்தில்.”

"அஸீ கட்டத்தில் எந்த இடம்?”

"அஸீக்குத் தெற்கே 'நர்வா என்ற இடமிருக்கிறது. அதில் பல தோட்டங்களும், பங்களாக்களும் உண்டு. அதில் தைப்பூர் மஹாராஜா பங்களாவில் அசுவினி பாபு இறங்கி யிருக்கிறார்” என்றனர்.

“ரயில் செலவுக்குப் பணம் கொடும்” என்றேன். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து விசிறி யெறிந்தார்.

மானத்தைக் கண்டதார்? மரியாதையைக் கண்டதார்? அங்கிருந்து அந்த க்ஷணமே வெளியேறி விட்டேன். வழி யெல்லாம் தின்பதற்கு நெஞ்சத்தையும், அருந்துவதற்குக் கண்ணீரையுமே கொண்டவனாய்க் காசிக்கு வந்து சேர்ந்தேன்.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப்பெறும்...

Next episode will be published soon.

Go to Aariloru pangu story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.