Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 08 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)
சாதம் பெசஞ்சி வெச்சிட்டு அறெயிலே போய் படுத் துட்டாரு. நான் எவ்வளவோ நேரம் அப்படியே உக்காந் திருந்தேன். ஒரு மனுஷனெ இன்னோர் மனுஷன் நியாய அநியாய மில்லாமே, ஈவிரக்க மில்லாமெ தண்டிக்கற்துக்கு, வாய்க்கு வந்தபடித் திட்றதுக்கு எங்கே இருந்து வருது அந்தச் சக்தி? அது எல்லார்க்கும் ஏன் இல்லாமெ போவுது? பண்டிகெ நாள் எல்லாரும் ருசியான பண்டங்க செஞ்சி சாப்பிடுவாங்களே தவர, மனைவி மக்களோட பொழுதுபோக்க மாட்டாங்களா. அதெக் கேக்கற அருகதெ எனக்கில்லே? கடவுளே! உன் படெப்பிலே இவ்வளவு பட்சபாதமா! ஒரு மனுஷன் இன்னோர் மனுஷனுக்கு அடிமெயா? குறெஞ்சது என் எண்ணெங்களெ வெளியே சொல்லிக்கற்துக்கு முடியும்னா எனக்கு இந்த ஊமெ வேதனெ இல்லாம போவுமே! மத்தியானம் வீட்லேயே இருப்பார்னு நினெச்சி அப்போவெ அடுப்பு மூட்டிரவா லட்டு செஞ்சேன். குளிச்சிட்டு வர்றதுக்குள்ளே படுக்கையிலே இருந்த மனுஷனெக் காணோம். ஸ்டாண்டிலே இருந்த துணிகளும் இல்லெ. வராந்தா விலே செருப்பும் இல்லெ. ஆச்சரியப்பட்றதுக்கு ஆவட்டும், துக்கபட்றதுக்கு ஆவட்டும் எனக்குச் சக்தி இல்லே. அவர் என்ன செஞ்சாலும் கவலெப்படாமெ சும்மா இருக்கணும். எவ்வளவு ராத்ரியிலெ வந்தாலும் சிரிச்ச முகத்தோட வரவேற்கணும். மனசிலே எவ்வளவு துக்க மிருந்தாலும் ஒழுங்கா காரியங்களெ கவனிக்கணும். அதுதான் எனக்கு வராது. எனக்குத் தன்மானம் இல்லே? என் மனசு வேதனெப் படாது? பொம்பளெயா இருந்தும் எனக்கு எல்லாம் லட்சணங்களும் இருக்கற்துக்கே இந்தத் தண்டனெ பத்தாதா?
தீராத வேதனெ கொடுத்துப் பொங்கல் லட்சுமி போய் விட்டாள். அம்மாவின் பேச்செக் கேட்டு பிறந்த வீட்டுக்குப் போயிருந்தா அக்காங்களோட, தங்கைங்களோ, பத்துப்பேர் சொந்தக்காரங்களோட, அம்மாவின் அன்பு மரியாதையோட... எல்லாத்தெயும் வெறுத்துட்டு நான் அனுபவிச்சது என்ன? நடந்தது என்ன.
பண்டிகெ முடிஞ்சதுமே அம்மா கடிதம் எழுதச் சொன்னாங்க. அம்மாவின் சந்தோஷத்துக்காகப் பொய்யெக் கற்பிச்சி எழுதணும். நாலாவது நாள் விடியற்காலமெ கடிதம் எழுதிட்டு உக்காந்திருந்தேன்.
'அம்மா!'
இங்கே நாங்கள் அனைவரும் நலம்! நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று