Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 09 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)
'நீ என்ன சொன்னாலும் எனக்குத் தேவையில்லே. மறந்துபோய்ச் செய்யலியோ, ஞாபகம் இருந்தே செய்யலியோ நான் யோசிக்க மாட்டேன். என் கண்ணுக்குத் தெரியற்துதான் உண்மெ. என் மேல உனக்கு எந்த அளவு மதிப்பு இருந்தாலும் சிரத்தெயோட எல்லாம் பண்ணுவெ. அது இல்லேங்கற்தனாலதான் மறதி வருது.' அது அவரோட வாதம்.
நான் செஞ்சது தப்பு. அவ்வளவுதான். அந்தத் தப்பு செய்யற்தலே என் எண்ணங்க மட்டும் அவர் ஊகிச்சபடி இல்லெ. அவரெ அலட்சியப்படுத்தி அவமதிப்பு செய்யற்தனாலே எனக்கு வர்றது ஒண்ணு மில்லே. அப்படிச் செய்யற்தெ என் மனசாட்சி ஒத்துக்காது. சக்கரெ இல்லாத காபி கொடுத்தப்பொ ' பானூ! காபியிலெ சக்கரெ போட மறந்துட்டெ, கொண்டுவா'ன்னு சொன்னா எவ்வளவு நல்லா இருக்கும்? அந்தத் தப்புலெ உள்நோக்கம் கண்டுபுடிச்சித் திட்டிக்கொட்டனா எவ்வளவு மதிப்பா இருக்குது? நான் செய்ற தப்புங்க மன்னிக்க முடியாதது, பொறுத்துக்க முடியாதது அல்ல. அந்த அளவு விட்டுக் கொடுக்கற தன்மெ புருஷன் மனெவி இடையே இருக்கத் தேவெயில்லியா? அதுதான் அவர்கிட்டே இல்லெ. தீவிரமான எண்ணங்களெ வெளியிட்றது, அப்புறம் சாப்பட்றதையோ குடிக்கற்தையோ விட்டுட்டு எழுந்திரிச்சிப் போறது.
ஒவ்வொரு தடவெ வீட்லெ இருந்தா ஏதோ தின்பண்டம் செய்றேன்னு வெச்சிக்கோ. அப்பப்பொ நான் 'உங்களுக்கு வேணுமா? கொண்டுவரட்டுமா?'ன்னு கேட்டுக்கிட்டே இருக்கணும். தனக்குத் தானே கேக்கக் கூடாதாம். அவரெத் தேடிக்கிட்டுப் பின்னாடியே சுத்திக் கிட்டிருக்கணுமாம். 'உங்களுக்கு வேணுங்கறபோது எடுத்துச் சாப்பிடுங்க. இல்லேன்னா கொண்டுவரச் சொல்லி என்கிட்டெ சொல்லுங்க. அவ்வளவுதானெ தவர விருந்தாளிகளெ கவனிக்கறா மாதிரி எப்பவும் நம்மெ நாமே கவனிக்கணும்னா அது எப்படி முடியும்?'னு கேட்டா--
'விருந்தாளிகளெத்தான் கவனிப்பியே தவர கட்டிக்கிட்ட புருஷனுக்குச் செய்ய முடியாதா? என்மேல உனக்கு அக்கறெ இருந்தா நீயே பண்ணுவெ. அந்தக்
கடமெ உனக்கு இருந்து தீரணும்.' அது தான் பதில். சிலரோடெ தத்துவங்க, எண்ணங்க இயற்கைக்கு மாறாக இருக்கும். எப்போதும் ஒர்த்தர் செய்யணும். ஒர்த்தர்
செஞ்சிக்கணும். பேச்சுக்குப் பேச்சு தப்பர்த்தம் பண்ணிக்கணும். எவ்வளவுன்னு தாங்கிக்கறது? நான் எவ்வளவு அக்கறெயா வேலை செஞ்சிட்டிருந்தாலும்
வீட்டுக் கடெமெங்களே எனக்குத் தெரியற்தில்லேன்னு சொல்றாரு. கை நழுவி ஒரு கப்பு ஒடிஞ்சி போச்சின்னு வெச்சிக்கோ, கீழே விழுந்து கண்ணாடி தூள் தூளாயிடுதுன்னு வெச்சிக்கோ, அதிக்காக நான் ரொம்ப கவலெப்பட மாட்டேன். விசனப்பட மாட்டேன். நாம வேணும்னே தூக்கி எறிய மாட்டோம். ஏதோ பிசகா