(Reading time: 10 - 20 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 13 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)

பானு சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டுப் பிறகு சொன்னாள்: "நான் சினிமா பாக்கற்தெ நிறுத்திட்டேன்.எட்டு மாசமாயிட்டுது.' கடவுளே! இதற்கு எதுவும் முன்கதை இல்லை அல்லவா?

'ஏன்?' என்று கேட்பதுபோல் வியப்புடன் பார்த்தேன். "நான் மாமாவோட போய் அவரெ அவமானப் படுத்தற்துக்கு இஷ்டம் இல்லாம நிறுத்திட்டேன்."

"என்ன ஆச்சி பானூ!"

"சொல்றதுக்கு ஒண்ணுமில்லே! அப்பொ ஒரு தடவெஏதோ இங்கிலீஷ் சினிமா வந்தது. ரொம்ப் நல்லா இருக்குதுன்னு படிச்சேன். 'போலாமா?'ன்னு கேட்டேன்.அந்த நாவல் நான் படிச்சதனாலெ சினிமா பாக்கலாம்னுதோணிச்சி.

அவர் லேசா சிரிச்சிட்டு, 'உன் மூஞ்சி! இங்கிலீஷ்சினிமான்னா விளையாட்டுன்னு நினெச்சிட்டியா என்ன?எங்களுக்கே எங்க தாத்தா வரணும்'னார்.

"போவட்டும், எனக்கு அர்த்தம் புரியாத இடத்தலெநீங்க சொல்லக் கூடாதா?'

'ரொம்ப நல்லா இருக்குது. உன்னைப்போல அம்மாமியெ அழெச்சிட்டுப் போய் சொல்லிக்கிட்டே உக்காந்திருந்தா எனக்கு வெக்கமா இல்லே.'

வெக்கத்தலெ என் தலெ குனிஞ்சி போச்சின்னா நம்பு!அதுக்கப்புறம் நான் எந்தச் சினிமாக்கும் போகல்லே.போனாலும் ரெண்டுபேரும் சேந்து போறது ரொம்பஅருமெ. அவர் எப்பவும் சிநெகிதங்களோடெ பாப்பார்.நான் யாராவது, பக்கத்து வீட்டுப் பாமா பாட்டியோடபோவேன். அப்படிப் போய் அந்தச் சினிமா பாக்கலேன்னா யார் அடிக்கறா? யாருக்கு வேணும்? நிறுத்திட்டேன்."

"உனக்கு இங்கிலீஷ் வருங்கற்து மாமாக்குத் தெரியாதா?"

"எனக்குத் தெரிஞ்சது ரொம்ப குறெச்சல்னே வெச்சுக்கோ-ஆனா அந்த அளவுகூட அவருக்குத் தெரியாது.அந்த விஷயம் தெரிஞ்சா தூக்கம் புடிக்காது. என்னெக்காவது பேசறப்பொ தெரியாம ரெண்டு இங்கிலீஷ்வார்த்தெ பேசிட்டா 'அப்பாடா? லண்டன்லெ பொறந்துஇந்தியாக்கு வந்தாப்பொல இருக்குது! எந்தக் கான்வென்ட்லேங்க நீங்க படிச்சது?'ன்னு பரிகாசம் பண்ணுவார். புதுசுலெ நான் கிரகிக்கலேன்னாலும் போகப்போகஅவர் குறெயெப் புரிஞ்சிக்கிட்டேன். அவர் கண்ணுமுன்னாலெ என்னெக்கும் இங்கிலீஷ் புஸ்தகம் படிக்கமாட்டேன். இங்க வந்த புதுசுலெ எத்தனெயோஇங்கிலீஷ் புஸ்தகம் படிக்கணும்னு. இங்கிலீஷ் சினிமாபாக்கணும்னு, அந்த பாஷெ அறிவெ வளத்துக்கணும்னு,எல்லாத்துக்கும் அவர் உற்சாகப் படுத்துவார்னு...எவ்வளவு பெரிய பைத்தியக்காரிங்கற்து இப்பொ தெரியுது.

சிநேகிதங்க யாராவது அப்பப்பொ வர்றங்கன்னு வெச்சுக்கொ----ஏதோ பேச்சு வருது. அதுக்கு நடுவுலெகலந்துகிட்டு என் எண்ணம் ஏதாவது சொல்றேன்னா,அவமானப் படவேண்டியதுதான்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.