அதிகமா அவங்க பேசிக்கற்து என்னன்ன நெனெக்கறே? 'கடவுள் இருக்கறாரா? இல்லெயா? இல்லே.எப்படிச் சொல்ல முடியும்? கண்ணுக்குத் தெரியற்தில்லெ அதனாலே - காத்து தென்பட்றதில்லேன்னாலும்உடம்புலெ படுது. வாசனெ மூக்குக்குத் தெரியுது. எந்தவிதத்திலும் அனுபவிச்சித் தெரிஞ்சிக்க முடியாத அந்தக்கடவுளுக்கு லட்ச லட்சமாக் கொட்டி அழாமெ வேறவிதமா ஜனங்க சுகப்படக் கூடாதா?' இது தான் முறையீடு---நிஜம்தான், ஊருக்கு இன்னும் நாலு கிளப்புங்ககட்டிப் போடக் கூடாதா? சிகரெட்டெ மலிவா விநியோகம் பண்ணக் கூடாதா? உத்தியோகம் இல்லாம சம்பளம்குடுக்கக் கூடாதா? சினிமா நட்சத்திரங்களோட பேட்டிக்கு ஏற்பாடு பண்ணக்கூடாதா? இன்னும் கேளு--' பைத்தியக்கார அரசாங்கம்'பா இது. இந்த நேரு போய்யாராவது ஹிட்லர் போல ஒருத்தன் வந்தாத்தான்....'இந்த ஜல்சாப் பேர்வழிங்க கதி தெரியும் நல்லா!
கடவுளிடத்தலே இருந்து புராணங்க மேலெ திரும்பும். அந்தப் பாரதம் என்னய்யா! பேச்சு எடுத்தா சாபம்,வரம்--காதுலே இருந்து குழந்தெ பொறக்கற்து!எல்லாம் வெறும் மோசம்! திரௌபதி மட்டும் அதிர்ஷ்டக்காரிய்யா!'
'முதல்லெ குந்தி, திரௌபதி எப்படிப் பதிவிரதெங்கஆனாங்க தெரியுமா?'
' அந்தக் காலத்தலே எத்தனபேர் புருஷங்க இருக்காங்களோ பொம்பளங்க அவ்வளவுக்கு அவ்வளவு பதிவிரதெங்க தெரியுமா!'
' அஹ்ஹஹ்ஹஹ்ஹா!' பயங்கரமான கொக்கரிப்பு.சிவசிவா! நம்பளப் போலவங்க காது மூடிக்கற்துதவர வேற வழியில்லே. எவ்வளவு மட்டமான மனுஷங்கஇருக்கறாங்க! நம்ப கலாச்சாரத்தெ இவ்வளவு கேலிபண்ணிச் சிரிக்கற்தனாலே இவங்களுக்கு வர்றது என்ன?
பிறகு சினிமாவெப்பத்தி--
அவங்க சம்பாஷனெ எவ்வளவு மட்டரகமா நடக்குதோ கேக்கறவங்களுக்குதான் தெரியும். கவனிச்சிப் பாத்தா எல்லாரும் பட்டம வாங்கனவங்க, எம். ஏ. படிச்சவங்க கூட -- பட்டங்களுக்கும் பண்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லேன்னு முடிவு கட்டணும் போல இருக்குது--
' நீங்கெல்லாம் படிச்சவங்கதானே! ஒவ்வொரு விஷயத்தெயும் ஏன் அவ்வளவு தப்பா எடுத்துக்கறீங்க!' ன்னு கேட்டா--
' உன் உதவாக்கரெ அபிப்ராயத்தெ இங்கெ யாரும்கேக்கலே, போ' ன்னு சொல்லிட்டார் மாமா ஒரு தடவெ.
நான் அவங்களுக்கெல்லாம் காபி குடுப்பேன். கொஞ்சம்தெரிஞ்சவங்க ஆனதாலே எப்பவாவது உரிமெயாப் பேசுவேன். அதனாலேதான் எதெயாவது நினெச்சி என்எண்ணங்களெச் சொன்னா