யில்லாம கூச்சல் போட்டுட்டிருந்தா, புதுசுலெ என்ன நடந்தாலும் ஆச்சரியப்பட்டுச் டிருந்தேன். அப்பொ எனக்கு உண்மையிலெ வேதனையாத் தோணலெ. நல்லதனமா சொன்னா அவரே கேப்பாரு. குடும்பப் பொறுப்பு அவருக்கும் இல்லியா?ன்னு நினெச்சிகிட்டேன். மொதமொதல்லெ அவர் எந்தத் தப்பு வேல செஞ்சபோதும் நான் அழுத்தமா ஒண்ணும் கேட்டுக்கல்லெ. எத்தனியொ விதத்தலெ எவ்வளவோ நிதானமா சொல்லிட்டு வந்தேன்.
'உங்களுக்கு சிகரெட் ரொம்ப இஷ்டம்போல இருக்குது.'
'வெறுமனெ இஷ்டம் இல்லே, உயிரு!'
'மாசத்துக்கு உங்க உயிருக்கு எவ்வளவு ஆவுதோ?'
'முப்பதுக்கு மேலெ......'
'அவ்வளவு பணம் - எரிஞ்சி சாம்பலாகறா மாதிரி இல்லே?'
'உனக்கு தெரியாது பானு! அது இல்லேன்னா என்னாலெ இருக்க முடியாது.'
'இப்பொ உங்க செலவு அதிகமாயிட்டுது தெரியுமா? இப்பொ நான் கூட இருக்கறேன்.'
'அப்டின்னா.........'
'பாருங்க! பொகெ அவ்வளவா குடிக்கற்து உடம்புக்குக் கூட நல்ல தில்லேன்னு சொல்றாங்க. நீங்க கொஞ்ச கொஞ்சமாக் குறெச்சிக்கிட்டே வந்தா நல்லா யிருக்கும் இல்லே?'
' ஆம், பாக்கலாம். ஆவட்டும்!' அவ்வளவுதான்! அந்தப் பாக்கலாம் பாக்காமலேவேதான் இருக்குது-- அப்புறம் இன்னொரு தடவெகேட்டப்போ என்னமோ சொன்னாரு. இன்னொரு தடவெஞாபகம் பண்ணப்போ கோவம் வந்தது. கொஞ்சநாளுபோவவிட்டு மறுபடி கேட்டப்போ எரிஞ்சி விழுந்தாரு.அது எனக்குத் தேவெ யில்லேன்னாரு. அந்தப் பேச்சேநான் எடுக்கக் கூடாதுன்னாரு. என்ன பண்றது? மத்தவிஷயகள்ளேயும் இதே மாதிரிதான் ஆயிட்டுது. என்சாந்தம், நம்பிக்கெ எல்லாம் வீணாப் போயிட்டுது.ஒண்ணும் பண்ண முடியாத நிலைக்கு வந்தேன்.அப்பத்திலே இருந்து அவர் தப்புங்களெ எடுத்துச்சொல்ல, பேச்சுக்குப் பேச்சு பதில் குடுக்க, கோவம்வந்தா பேசற்தெ நிறுத்திக்க ஆரம்பிச்சேன். என்குடும்பத்தெச் சரிப்படுத்திக்கலாம்னு, என் புருஷனோடஎல்லாரெப் போல சந்தோஷம் அனுபவிக்கலாம்னுநான் ஆசெப்பட்டேன். அது பேராசெயோ என்னவோபுரியல்லே. இருந்தாலும் என் முயற்சியிலெ குறெ இருக்குதுன்னு நீ சொல்றே. அப்படின்னா இனிமேலெ என்னாலெமுடியற வரைக்கும் முயற்சிபண்றேன். நம்பறியா?"
"பானூ! எப்படியோ ஒருவிதமா உன் குடும்பத்தெச்சரிபண்ணனுங்கற எண்ணம் தவர எனக்கு வேறநினெப்பு இருக்குதுங்கறயா?"
பானு சிரித்தாள். " அண்ணா! நான் இப்பொ கர்மங்க,முன் ஜெனமங்க, செஞ்சிகிட்ட பாவ