Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 15 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)
பானுவைப் பற்றிய சிந்தனைகளே என்னைப் பற்றிக்கொண்டு எப்போதும் வேதனைப் படுத்திக்கொண்டிருந்தன. பானுவுக்கு மட்டும் ஏதோ ஆறுதல்சொன்னேனே தவிர, உண்மையில் நான் எதிர்பார்த்தது நடக்குமா? என்றைக்காவது கணவரின் அன்பைப்பெற்று பானு இன்பங் காண்பாளா? எப்படி நம்புவது?பானு இன்பம் அடைய வேண்டும் என்றால் நான் என்னசெய்ய வேண்டும்? படிப்படியாக மாமாவின் நட்பைப்பெற்று உயிருக் குயிராகும் நிலை பெற்று அவருடைய குறைநிறைகளை எடுத்துச் சொன்னால்...? அப்பொழுது அவர்என்னை அடித்து விரட்டமாட்டார் அல்லவா? என்சிந்தனைகளுக்கு ஒரு முடிவில்லை. பானுவை எப்பொழுதுபார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் பார்த்து வருகிறேன். ஒரு முறை பானு கேட்டாள் - "உனக்கு லைப்ரரிபுஸ்தகங்க கொண்டுவந்து குடுக்க முடியுமா அண்ணா?"என்று - நான் பானுவின் கண்களில் உற்றுப் பார்த்தேன்.அந்தக் கண்கள் எனக்கு எவ்வளவோ வரலாறுகளைக்கூறின. பானுவுக்குப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம்ஏராளம். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ளமுயற்சி கூடச் செய்யாமலிருப்பது அறியாமை! பானுவின்ஆவல்களைப் பார்த்து ஒரு நாள் அவள் பெரிய எழுத்தாளிஆவாளோ என்று நினைத்து வந்தவன் நான்.
"இங்கே வந்ததலே யிருந்து எவ்வளவோ புஸ்தகங்கபடிக்கணும்னு நினெச்சேன். நம்ம ஊர் லைப்ரரிலே ரொம்ப புஸ்தகங்க இல்லெ. ஆனா யாரு கொண்டுவந்துதருவாங்க?"
"போவட்டும் விடு! இனிமே நான் கொண்டுவர்றேன்.சரிதானே? உனக்குப் பொறுமெ எவ்வளவுதான் இருக்குது----பாக்கறேன். எத்தனெ படிக்கிறியோ!"
பானு என்னிடம் ஓர் உதவி கேட்டால் எனக்குஎவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது. வெற்றுப் பேச்சுக்கல்லாமல் அண்ணனாகச் செயல் முறையில் நான் பானுவுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு அடுத்த நாளேமத்திய நூல் நிலையத்தில் இரண்டு பேருக்கு உறுப்பினர்கட்டணம் கட்டினேன். ஒரே முறையில் நன்னான்குபுஸ்தகங்கள் எடுக்கலாம். முதன் முதலில் சலத்தின்'ஸ்தீரீ' ஒன்றே எடுத்துக் கொண்டுபோனேன். அதைப்பார்த்த பானு கூறினாள் - " இது என்கிட்டெ இருக்குதுடா!இதனாலே எங்க ரெண்டு பேருக்கும் தகராறே நடந்தது"என்று.
"புஸ்தகத்தெப் பத்தித் தகராறு என்ன?"
"வேறென்னன்னு நினெச்சே? இந்த வீட்லெ தகராறுஉண்டாக்கற சக்தி தொடப்பக் குச்சிக்குக் கூட இருக்குது.அதெமட்டும் நானி எந்த ரூமிலேயாவது கொண்டுவந்துபோட்டுட்டான்னா அன்னக்கி ஒரு சின்ன யுத்தம்! சரிதான் புஸ்தகம்னு கேக்கறியா? 'ஸ்திரீ'யை நான்படிக்கற்தெப் பாத்து மாமா எரிஞ்சி விழுந்தார். 'சலத்தின்புஸ்தகங்களெ நீ படிக்கக் கூடாது'ன்னார்.