உண்டாக்கிட்டு வர்றா.தங்க தடெ இல்லாமெ ஆட்சி பண்ற தாத்தாவெப் போல ஆம்பளெங்க இன்னும் இருக்காங்களே தவர அந்த ஆட்சியெ ஏத்துக்கற பாமா பாட்டியெப் பொல பொம்பளெங்க இல்லே. அதனாலெதான் இந்தக் கால குடும்பங்க பழைய ரீதியிலெ நடக்கற்தில்லெ, புதிய மனோபாவங்களோடெயும் நடக்கற்தில்லே."
"எண்ணங்க ஒத்துப் போகாத மனுஷங்க ஜோடி சேர்றப்போதான் பிரச்சனெ வருது. முடிஞ்ச வரெக்கும் ரெண்டு பேரும் ஒத்துமெயா போவற்துக்கு முயற்சி பண்ணனும். அது தான் நடக்கற்தில்லே. உங்கக் குடும் பத்தலெ----"
"என்கிட்டெ பிசகிருந்தா என்னாலெ முடிஞ்ச வரெக்கும் அதெ சரிப்படுத்திக்கற்துக்கே முயற்சி பண்றேன்."
"இவ்வளவுக்கும் அந்த சரோஜா தேவி திரும்பி வந்தாளா?"
"நாலாவது நாளே புருஷன் போயி கூட்டிட்டு வந்தாரு. உயிரில்லாமெ உடம்பு இருக்குமா?"
"ஆனா இப்போ பாமா பாட்டி போறது எதுக்கு?"
"நல்லா இருக்குது, இவங்க நகர்லேன்னா ஒரு மணி பாத்துட்டு அந்தம்மா சூட்கேஸ் தயார் பண்ணிட மாட்டாங்க? படிப்புக்கும் குடும்பம் நடத்தற்துக்கும் சம்பந்தம் இல்லேங்கறது உலகறிஞ்ச உண்மை."
ஒவ்வொரு வாரமும் நல்ல நல்ல புத்தகங்களைக் கொண்டு சென்று கொடுத்து பானுவைப் பார்த்து வருகிறேன். அவ்வப்பொழுது நடக்கும் சிறப்புச் செய்திகளைத் தெரிந்துகொண்டு வருகிறேன். ஒரு முறை நான் முன் பக்கத்து அறையில் உட்கார்ந்து கொண்டு மருமகனுக்கு வண்ணப் படங்கள் போட்ட புத்தகத்தைக் காட்டிக் கொண்டிருந்தேன். பானு மாமாவுக்குச் சாதம் பரி மாறிக்கொண்டிருந்தாள். இரண்டு நிமிஷத்திற்குள்ளே அவர் ஏதோ சத்தம் போடுவது போல் கேட்டது. நான் திடுக்கிட்டேன். "உன் கவனம் நிஜமா வீட்டு வேலெயிலே இருக்குதா? இல்லெ, உன் சொந்தக் கடமெங்க எங்கற்து ஏதாவது குறுக்கே வருதா? இப்படி வேக வெச்சி கைக்கு வந்தபடி உப்பு காரத்தெத் தூக்கிப் போட்டு என் மூஞ்சியிலே எறியறியா? ஓட்டல்காரன் தேவலெ! ருசியா வயிறு நிறெய போடறான். ஒரு வேளெ நீ திருப்தியா சாப்படறாப்போல சமயல் பண்றியா? உனக்கு வெக்கமா யில்லே? கட்டியக் கணவனுக்கு வயிறு நிறெய சாதம் போடலேன்னா எதுக்கு நீ இங்கெ இருக்கற்து? நல்லா சாப்டுட்டுப் பொரள்றதுக்கா? ஹாயா புஸ்தகங்க படிக்கற்துக்கா? இருந்தாலும் உனக்கு ஆசெங்க வேற இருந்தா வீட்டெ எதுக்குக் கட்டிட்டு அழணும்? நீ டாக்டராயி உருப்பட்டிருக்கணுமே தவர எழவெடுத்த சமயல் வேலெ பண்றியா? என்னெ ஏன் இப்படி அழவெக்கறே? இங்கே இருக்கணும்னு இல்லேன்னா போய்த் தொலெ! உனக்கு இஷ்ட மானவனோடு போயிடு!....... டர்ட்டி ரோக்! நீ ஒரு பொம்பளெயா?