(Reading time: 12 - 24 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

சுகமா படிச்சிட்டிருக்கறேன்னு..."

நான் வியப்புடன் பார்த்தேன்.

"ஏன்? அவர் திட்னதெ நீயும் கேட்டேல்லே! அர்த்தமாகல்லியா? அவர் உள்ளர்த்தம் வெச்சிப் பேசற்தெப் புரிஞ்சிக்கணும்னா ரொம்ப அனுபவம் வேணும்."

"அதுக்காகத்தானா இடெயிலே என்கிட்ட சரியா பேசற்தில்லே?"

பானு ஒன்றும் பேசவில்லை. நான் சற்றுச் சிந்திக்கலானேன். "ஆனா பானூ! மாமாக்கு இஷ்டமில்லாத வேலெயெ நான் செஞ்சா நல்லா இருக்குமா? இனிமேலும் நான் புஸ்தகங்க கொண்டு வந்துட்டே இருந்தா... நீயும் நினெச்சி தாரு."

"அண்ணா! நான் வயிறு நிறெய சாப்பாடு சாப்பட்றது கூட அவருக்கு இஷ்டம் இல்லே. திருப்தியா சாப்டுட்டு சுகமா தூங்கறேன்னு எத்தனியோ தடவெ திட்டிட்டே இருக்கறாரு. அப்படின்னா என்னெ சாப்பாட்டெயும் தூக்கத்தெயும் நிறுத்திடச் சொல்றியா? நாம செய்யக் கூடாத வேலெயெச் செய்றோமா? புஸ்தகம் படிக்கறது கூட சாதம் சாப்பட்றா மாதிரி சாதாரணமான விஷயம்தான். அதெப் படிச்சிட்டு உக்காந்திருந்தா என் மனசுக்கு நிம்மதியாகவும் சுகமாகவும் இருக்குது. அதெக் கொண்ட வர்றதெ நீ நிறுத்திட்டீன்னா சரி... உன் இஷ்டம்!"

"சரிதான்! நான் கொண்டு வர்றேன், ஆனா நீ கொஞ்சம் ரகசியமா வெச்சிக்கோ. மாமா கண்லெ படவிடாதே, அவ்வளவு தான்!"

பானு வேதனையோடு சிரித்தாள். "எவ்வளவு திருட்டுப் பொழப்பு!"

"டாக்டராயி உருப்பட்டிருக்கணும்னா என்ன அர்த்தம்?" என்று கேட்டேன் நினைவு வந்து.

"அந்த மனுஷன் குத்திக் காட்றதுக் கெல்லாம் நான் என்ன அர்த்தம் சொல்றது? ஒரு தடவெ ஏதோ சாதாரணமா பேசிக்கிட்டிருந்தப் பொவாய் தவறிச் சொல்லிட்டேன். கர்மம்! ' நான் காலேஜிலே சேர்ந்திருந்தா இதுக் குள்ளே டாக்டராயிருப்பேன்'னு! அதுதான் பேச்சுக்குப் பேச்சு சொல்றது. ஏதோ சாதாரணமாச் சொல்ற வார்த்தெங்களெ வெச்சி குத்திக் காட்டிகிட்டே இருந்தா மனசு தெறந்து பேச முடியுமா?" நீண்ட நேரம் இரு வரும் வேதனையோடு உட்கார்ந்திருந்தோம்.

நான் ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரத்தில் பானு எழுந்து தட்டை எடுத்தாள். இதற்குள் சட்டென்று நினைவு வந்தாற்போல் " உனக்குச் சொன்னேனா? பாமா பாட்டி மக செத்துப் போயிட்டா!" என்றாள்.

"செத்து போயிட்டாளா?" என்றேன் வியப்போடு.

" ஆமாம், பாமா பாட்டி முகத்தெ நான் பாக்க முடியாம ஆயிட்டுது. அவங்களுக்கு இருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.