அந்த ஆதாரம் கூட போயிட்டுது. பத்து நாளாச்சி."
" என்ன சீக்கு அவங்களுக்கு? "
" சீக்குமில்லே கீக்கு மில்லே. அந்த அம்மாக்கு மாசம் ஆக ஆக வயத்திலே நோவு வருதாம். அப்படியெ அவஸ்தெ பட்டு மூன்று குழந்தெங்களெ பெத்தாங்க. அவங்க மறுபடியும் கர்ப்பம் தரிச்சா ரொம்ப ஆபத்துன்னு டாக்டர் கண்டிப்பாச் சொல்லிட்டாராம். ஆனாலும் அந்த மகானுபாவர் ஆபரேஷன் ஒண்ணும் பண்ணிக்கிலெயாம். போறது தன் பிராணன் இல்லே இல்லியா? அந்த அம்மாக்கு மறுபடியும் கர்ப்பம் வந்தது. சாவும் வந்தது. போவட்டும்! அவருக்கு சீக்ரத்தலெ அழகா புது மனெவி வர்றா!"
" சே! ஒரேயடியா அப்படிப் பேசாதே பானூ! அவரு கொஞ்சம் அலட்சியமா இருந்திருப்பார். இதுக்குள்ளே இப்படி நடக்குமுன்னு....."
" அதுவே அவர் பிராணனுக்கு ஆபத்து வருதுன்னா அப்படி அலட்சியமா இருப்பாரா சொல்லு?"
"அப்படிப்பட்ட முரடன் செய்தாலும் செய்வான். ரொம்ப பேரு வெள்ளம் வந்த பிறகுதான் அணெ கட்டு வாங்க."
" உன் சமாதானத்தெ நான் ஒத்துக்க மாட்டேன். அவருக்கு மனெவி செத்துப் போயிடுவாளேங்கற அச்சம் இல்லே. எந்த அளவு அச்சம் இருந்தாலும் அவ்வளவு அலட்சியமா இருக்க முடியாது. அந்த அம்மாவெ ஏதோ ஒரு விதமா காப்பாத்திக்கற்துக்கு முயற்சி பண்ணுவாரு."
சிந்தித்துப் பார்த்தபொழுது அது உண்மை என்றே தோன்றியது. " தன்னை நம்பி, தன் சொந்தக்காரங்களெ எல்லாம் விட்டு வந்து எல்லாத்தெயும் அர்ப்பணம் பண்ற மனெவியின் உயிரை அவ்வளவு லேசா பாக்கற ஆம்பளெங்க இருக்கறாங்கன்னா அதிசயமில்லே. கணவனெ விஷம் வெச்சி கொண்ண மனைவிகளும் இருக்கறாங்க. ஒரு கதையிலேன்னு நினெக்கிறேன். கணவன் பேர்லெ ஆயிரக் கணக்கிலெ ரூபாய்க்கு இன்ஷுர் பண்ணி அப்புறம் அவரெக் கொல்றதுக்கு முயற்சி பண்றா. இந்த மாதிரி கேசுங்க ரொம்ப குறெச்சல்னெ வெச்சிக்கொ-- ஆனாலும் நாம முடிவுகட்டிட முடியாது பானூ! கெட்டதுங்கற்து ஒரு இனத்தலெதான் அதிகம்னு சொல்லமுடியாது."
" இவங்க செஞ்சப்பொ அவங்க செஞ்சாங்களா இல்லியாங்கற் தில்லே கேள்வி. புருஷனெ அலட்சியம் பண்ண மனெவிக்கு உலகத்தலெ எவ்வளவு மரியாதெ கிடைக்குதோ தெரியுமா? அதே தப்பெப் பண்ண ஆம்பளெக்கு அந்தத் தண்டனெ இல்லியே! கடவுள் விருப்பம்! இல்லேன்னா அவளோட தலெவிதி அவ்வளதான்! அவன் பத்துப் பேர்லெ மகாராஜா போல திரியறான், குத்தவாளி யாரானாலும், ஒரே தண்டனெ அனுபவிச்சா அது நியாயம் ஆகும்."