(Reading time: 21 - 41 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

முடியாம வந்தாலும் பொறுத்துக்கிட்டு, 'அதுன்னா அண்ணி! அவளுக்குக் கஷ்டம் என்ன இருக்கப் போவுது? என்னவோ குழுந்தெயெப் பாக்கணும்னு தோணுச்சி.."ன்னு சொல்லிட்டிருந்தா, 'போதும் சும்மா இரும்மா! நீ ஒருத்தி தான் மகளெப் பெத்தெ! அவ என்ன பாலு குடிக்கறாளா? அடிக்கடிக்கு ஓடிவர்றே'ன்னு மூஞ்சியி லடிக்கறா மாதிரி சொல்வாளாம்.

பாட்டி பதில் ஒண்ணும் சொல்ல மாட்டாள். சொன்னா வருஷததுக் கொருதடவெ மகளெப் பாக்கற பாக்கியம் கூட இருக்காது. பாட்டி இருக்கற வரெக்கும் சம்பந்தி பக்கத்தலேயே திரிஞ்சிக்கிட் டிருப்பாளாம். அப்பொ பாட்டி ஒண்ணும் பேச முடியாத நிலெயில் இருப்பாங்களாம். மகளெக் கொஞ்ச நேரம் கண்ணாலெ பாத்துட்டு உடனே வண்டியெப் பூட்டச் சொல்லி வந்துடுவாங்களாம். சம்பந்தி அம்மா சாப்பாட்டுக்குக்கூட ஒண்ணும் ஏற்பாடு பண்ண மாட்டாங்களாம.

வருஷத்துக் கொரு தடவெ ஏதாவது ஒரு பண்டிகெ சாக்குலெ அத்தெயப் பிறந்த வீட்டுக்கு அழெச்சிட்டு வந்தா தாத்தாக்கும் பாட்டிக்கும் அன்னக்கி ஒரு பெரிய திருவிழா மாதிரி இருக்குமாம்.

தொடரும்

Go to Kaagitha maaligai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.