(Reading time: 19 - 38 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

வாழறவங்களெக் காதலிக்கணும்னு கட்டாயமில்லியே?'

'என்னவோ பானூ!. இதுவரெயிலெ நீ ரொம்ப நல்லவளா யிருந்தே. ஏனோ ரொம்ப மாறிட்டு வர்றே.'

'அதுதான் தேவைப்படுது. நீங்க சொன்னதெல்லாம் நிஜம்னும், செஞ்சதெல்லாம் நல்லதுன்னும் நம்பின நாளெல்லாம், கண்ணு தெறந்து பாக்காத நாளெல்லாம், சந்தேகப் படவே தெரியாத நாளெல்லாம் நல்லவளா,

ரொம்ப நல்லவளா இருந்தேன். ஆனா இனிமே நீங்க செய்யக்கூடியது ஒண்ணுமே இல்லெ. என்னெச் சுகப்பட வெக்கவும் முடியாது, துக்கப்பட வெக்கவும் முடியாது உங்களாலே. நான் எதுக்கும் தயாரா இருக்கறேன். கண்ணாடி ஒடஞ்சா ஒட்டிக்காது! கண்ணாடியெவிட மென்மெயான மனசு உடெஞ்சா நல்லா ஆகாது.' கொஞ்சநேரம் மௌனம்----'சரி, பானூ! உன் இஷ்டம்! நான் ஒண்ணும் செய்யற்துக் கில்லெ. எப்பவாவது உன் மனசுலெ எனக்கு நல்லது செய்யணும்னு எண்ணம் வந்தா நான் அதிர்ஷ்டக்காரன்!'

அது கடைசி ஆயுதம்! எனக்கு வெறுப்பு வந்தது. எத் தகைய நிலெமெ வந்தாலும், ஒரு மனுஷன் தன்னெத்தானே கொலெ பண்ணிக்கிறதா?

'நீங்க தயவுசெஞ்சி அவ்வளவு கீழே இறங்கிப் போயிடாதீங்க. பொம்பளெக்குச் சாப்பாடு போட்டு, பொம்பளெயக் காப்பாத்தி, பொம்பளெகிட்டெ இவ்வளவு கெஞ்சிப் பேசற்தா? நான் மனெவியாவே இருக்கலாம், ஆனா பொம்பளெ. உங்க மனிதத் தன்மெயெ நீங்க காப்பாத்திக்கணும். அதுதான் என் வேண்டுதல்!'

அவர் முகபாவம் கொஞ்ச கொஞ்சமாக மாறிட்டது. அடக்கி வெச்ச கோவம், நடிச்சிட்டு வந்த சாந்தம், பாதிக்கப்பட்ட தன்மானம், பொங்கிவரும் ஆவேசம்----எல்லாம் சிறுகச்சிறுக வெளிப்பட ஆரம்பிச்சது.

கம்பீரமாகக் கேட்டார்----'அந்தப் பணத்தெ என்ன பண்ணப்போறே?'

'என்னவோ பண்றேன். ஒண்ணும் பண்ண முடியலேன்னா நெருப்புலெ போட்டுக் கொளுத்தறேன். உங்க கிட்டெ மட்டும்...'

என் கன்னங்க அதிர்ந்தன. கண்ணுங்க இருண்டன. தள்ளாடி விழுந்தேன்.

'திருட்டுக்கழுதெ! எவ்வளவு கொழுப்பு! கட்டிக்கிட்ட புருஷன் கால்லே கையிலே விழுந்து வேண்டிக்கிட்டா புத்திமதியா சொல்றே? பண்த்தெ நெருப்பிலெ போட்டுக் கொளுத்தறியா? நீ நெருப்பிலெ விழுந்து எரியறியா? பாக்கறேன்,. அந்தப் பணம் என் கைக்கு எப்படி வராமெ போவுதோ நானும் பாக்கறேன்!'

'இதுதானா உங்ககிட்டெ வந்த மாறுதல்?'

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.