'வாயெ மூடு! நீ எனக்குக் கத்துத் தர்றியா?'
' இல்லெ, நீங்க ரொம்ப மாறிட்டீங்கன்னு, என் மேலெ அன்பு காட்றீங்கன்னு சொன்னா அது நிஜமா இல்லியான்னு தெரிஞ்சிக்கறேன்.'
'தேவெ யில்லெ. அந்தச் சந்தர்ப்பத்தெ நீ நழுவ விட்டுட்டே. நான் எல்லா விதத்திலும் மாறிடணும்னு நினெச்சேன். ஆனா துளிக்கூடப் பயனில்லாமெ பண்ணிட்டே. உனக்கு இப்பொ புத்தி வராது. நான் இன்னும்--இன்னும் நாசமாயி, குடிச்சி, கும்மாளமடிச்சி எவளெ யாவது இழுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தா அப்பொ....'
'எவ்வளவு அர்த்த மில்லாமெ பேசறீங்க! என் மேலெ கோவத்தலெ உங்களெ நீங்க நாசனம் பண்ணிக்கிறீங்களா? அதிகாரத்தாலெ மன்னிப்பு சம்பாதிச்சிக்கிறீங்களா? ஒரு மனுஷன் நல்ல குணங்களோட இருக்கறது பிறத்தியாருக் காகவா?'
சீ! உன்னோட எனக்கு என்ன பேசவேண்டியிருக்குது? நீ குடும்பப் பெண்ணா? கட்டிக்கிட்ட முண்டம் கடன்காரனாயி அவஸ்தெப் பட்டா நகெங்களெ சிங்காரிச்சிக்கிட்டு ஊர்கோலம் வர்றியா? கடன் காரனுங் கெல்லாம் சேந்து உன் புருஷனெ ஜெயில்லே தள்ளவெச்சா நீ ரூபாய்ங்களெ படுக்கெயிலெ பரப்பிக்கிட்டுப் படுத்துக்கப் போறியா? உனக்கு இப்பொ புத்தி வராது? அந்த நாள்... ஒரு நாள் ....'
சொல்றதுக்கு என்ன இருக்குது? முதல்லியே குரங்கு! கள்ளு குடிச்சிட்டுது! நெருப்பு மெதிச்சிட்டுது! தேளு கொட்டிட்டுது! ரோஷத்தோட குதிக்காதூ?
அப்பாவுக்குப் பதில் எழுதனேன்.----'பணத்தெ பாங்க்கிலே போடுங்க. பாபுவின் படிப்புக்கு உபயோகப்படும்'னு. ஆனா கடிதம் எழுதிட்ட எவ்வளவு அழுதேனோ தெரியுமா?
அந்தப் பணத்தெவிட என் புருஷன் மதிப்பு ரொம்பக் குறைவு. அந்த மனுஷன் கடன்காரனாகி இருந்தாலும், வெக்கத்தெ விட்டுக் கேட்டும்----அந்தக் கோரிக்கெயெ நிறெவேத்த முடியாமெ போயிட்டேன்னா, அந்தப் பணத்துக்காக அவரெ நிராகரிச்சேன்னு சொன்னா, அதுக்கு எவ்வளவு ஆழமான காரணம் இருக்கணும்? இந்தக் குடும்பம் முறையா நடக்கற நாள் அந்தப் பணத்தெ நான் கண் ணெடுத்துப் பாக்க முடியுமா? இந்தக் குடும்பம் பரஸ்பர அன்பாலெ பிணைக்கப்படும் நாள் யாருடைய கஷ்ட சுகங்க அவங்கள தாகவே இருக்குமா? தகப்பன் திறமெ யுள்ளவனா இருந்தா மகனின் படிப்புக்காகத் தாய் கவலெப்பட வேண்டிய தேவெ வருமா? 'கடவுளே! இந்த வேதனெக்கு முடிவே யில்லியா? இந்தக் கண்ணீருக்கு மதிப்பே யில்லியா?'ன்னு அழுதேன். அதூ இப்பொ சமீபத்தலெ நடந்த விஷயம். மாமா என்னோட மூணு நாளாப் பேசற்தில்லே" என்றாள் பானு.