"போவட்டும், பாலு குடிக்கிறியா?"
"எனக்கு வேணாம்."
"நீ நல்ல பையன் இல்லே? கொஞ்சம் குடி, கொண்டு வரட்டுமா?"
"எங்கம்மா கித்தே தூக்கித்துப் போறியா?" சரியென்றால் பால் குடித்ததும் புறப்படச் சொல்கிறான் முடியாதென்றால் பாலே குடிக்கமாட்டேன் என்கிறான். நான் ஒன்றும் பேசாமல் உட்கார்ந் திருந்தேன். அவன் அழத்தொடங்கினான். அவனைப் பார்க்கப் பார்க்க என் வயிறு பற்றி எரிந்தது. இவ்வளவு சிறிய வயதில் தாயை இழந்தவன் எவ்வளவு துர்ப்பாக்கியசாலி, இல்லையா! அவன் கட்டிலை விட்டு இறங்கி என் மேல் கோபமாக நான்கு அடி நடந்து சென்று நின்றுகொண்டு அழுகிறான். அவனுக்கு யாரும் இல்லாதது போலவும், அனாதை ஆகிலிட்டாற் போலவும், தனிமையில் அவதிப்படுவது போலவும் தோன்றியது. சித்தி இந்த ஏக்கத்தைக் கண்டு இன்னும் சோகத்தில் அழுந்திப் போனாள். நான் வலுக்கட்டாயமாக அவனை அருகில் அழைத்துக் கொண்டேன். அவன் செயலற்றுத் தேம்பிக்கொண்டே என் மடியில் சுருண்டு கொண்டான்.
பாபு தீவிரமான காய்ச்சலில் விழுந்து கிடக்கிறான். நினைவு இல்லாமல் கிடக்கிறான். இடை யிடையே "அம்மா! அம்மா!" என்று புலம்பிக்கொண்டு இருக்கிறான். டாக்டர் பக்கத்து அறையில் ஊசி போடுவதற்குத் தயார் செய்துகொண்டிருந்தார். அமைதியாக வீட்டில் எல்லாரும் பாபுவைச் சுற்றி உட்கார்ந் திருக்கின்றனர். எல்லார் முகங்ளிலும் இனமறியாத அச்சம் குடிகொண்டிருக்கிறது. நான் திடீரென்று எழுந்து சென்றேன். டாக்டர் அப்போதுதான் சிரன்ஜ் எடுத்துக்கொண்டு வந்தார். "டாக்டர்........" என்று கைகளைப் பிடித்துக் கொண்டேன் பயத்துடன். என் உடல் நடுங்கியது. குரல் சரியாக வெளிவர வில்லை. "பாபுவை....காப்பாத்தறேன்னு சத்தியம் பண்ணுங்க......டாக்டர்! ........"
"ராவு சார்! நீங்க பயப்படாதீங்க. நான் நல்ல மருந்துங்கதான் குடுக்கிறேன். என் சக்திவரெக்கும் முயற்சி பண்றேன்."
"இல்லெ டாக்டர்! பாபு...பிழைச்சிடுவான்னு சொல்ல முடியாதா? எந்தப் பட்ணத்துக்காவது அழைச்சிட்டுப் போச் சொல்றீங்களா?"
"ராவு சார்! நீங்க அவசரப் படறீங்க. பாபுக்கு அம்மாமேலெ ஏக்கம் தவற வேறெ நோய் ஒண்ணு மில்லெ. என்னெ டாக்டரா யில்லே, உங்க அண்ணனாப் பாருங்க. ஒரு பச்செக் குழந்தெக்கு நான் அநியாயம் பண்ணுவேனா?"