(Reading time: 22 - 43 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

"மன்னிச்சிடுங்க டாக்டர்! என் வேதனெ உங்களுக்குத் தெரியாது; என் தங்கெ தன் மகனெ என்கிட்டெ ஒப்படெச்சிட்டுத் தற்கொலெ பண்ணிக்கிட்டா. பாவுவெ நான் பிழெக்கவெக்க முடியலேன்னா, டாக்டர்...! நான் ஒண்ணும் சொல்ல முடியலே...அவனெக் காப்பாத்தியே ஆவணும்."

டாக்டர் என்னைத் தள்ளிக்கொண்டு வெளியே சென்றார். நான் பின்னாலேயே ஓடிச் சென்றேன். ஊசி போட்ட வலியால் பாபு கேவிக் கேவி அழுதான். கண்களை மூடிக்கொண்டே படுத்துக்கொண்டு நீண்டநேரம் அழுதான்.

சிறுகச் சிறுக பகல்பொழுது நழுவுகிறது. நான்கு பக்கமும் இருள் சூழ்ந்துகொண்டு வருகிறது. சித்தியும் நானும் பாபுவின் கட்டி லருகிலே உட்கார்ந் திருக்கிறோம். எனக்கு நான்கைந்து நாட்களாகத் தூக்கமில்லை...அப்படியே பாபுவின் பக்கத்தில் படுத்துக்கொண்டால் கண்களை மூடிக்கொண்டு வருகின்றன.

வீடெல்லாம் இருட்டாக இருக்கிறது. சித்தி எழுந்து விளக்கைப் போடவில்லை. இருட்டிலேயே படிகள் ஏறி யாரோ வருகிறார்கள். நடையெல்லாம் பானுவின் நடையைப் போலவே இருக்கிறது. இன்னும் அருகில் வருகிறாள் பானூ!

"பானூ.....!" என்று கத்தினேன். சித்தி மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். பானு மேலும் அருகில் வந்து சிரித்தாள். "கோவம் வந்துதில்லே உனக்கு? அதான் வந்துட்டேனே? என்னெ அலெ அடிச்சிட்டுப் போம் போது ஒரு செம்படவன் காப்பாத்தனான். ரெண்டுநாள் எனக்கு நினெவே வரல்லே' சொல்லிக் கொண்டே போகிறாள். நான் பைத்தியம் பிடித்தவன் போல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

'அய்யோ! பாபுக்கு ஜொரம் வந்துதா? தம்பி! நான்தான் அம்மா! வந்திருக்கேன்........அம்மாவெப் பாரு நானீ!' பானு நானியைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். பாபுவை எடுத்துக்கொண்டு காற்றிலே அப்படியே....... தூக்கிக்கொண்டு பறந்து போகிறாள்.

'பானூ' என்று பிதற்றிக் கூச்சல் போட்டேன்.

"கேசவ்! கேசவ்! பாபூ!"

யாரோ தட்டி எழுப்புகிறார்கள். திடுக்கிட்டேன். சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். பாபு பக்கத்திலேயே இருக்கிறான். என் உடலெல்லாம் கிடுகிடுவென்று நடுங்குகிறது. சித்தி என் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.