(Reading time: 1 - 2 minutes)

                     என்ன தவம் செய்தேன் .....

                                        - Nila Ram

வரம் கேட்டேன் ...... உன்னையே தந்தாய்....

               வாழ்நாள் முழுவதும் கோர்த்து நடக்க ....
உன் கரம் கேட்டேன் ... என் விழியாய் வந்தாய் ......
                வாழ்நாள் முழுவதும் இப்படியே வருவாயா என்றேன் ....
வேறென்னடி வேலை எனக்கு என்றாய் .....
                 தவறு செய்தாள் என் செய்வாய் என்றேன் .....
தந்தையை போல கண்டிப்பேன் என்றாய் ......
                சோர்ந்து போனால் என் செய்வாய் என்றேன் .....
தாயை போல அரவணைப்பேன் என்றாய் ......
                கோபம் கொண்டால் என் செய்வாய் என்றேன் ..
குழந்தையை போல அடங்கி போவேன் என்றாய்.....
                 துவண்டு போனால் என் செய்வாய் என்றேன் .....
தோழனை போன்று என் தோள் கொடுப்பேன் என்றாய் .....
                 தாய் போல தந்தை போல தோழனை போல........
குழந்தை போல எல்லாமுமாய் நீ கிடைக்க ......
                  நான் என்ன தவம் செய்தேன் என்றேன் ......
இந்த ஜென்மம் முழுக்க என்னவளாய் எனக்காக நீ இரு என்றாய் ....

2 comments

  • என்ன தவம் செய்தேன், இக் கவிதை படிக்க, ரசிக்க, போற்ற, வாழ்த்த! இப்படி எல்லாமுமாக இருப்பவனே கணவன்! சிறந்த மனிதன்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.