(Reading time: 2 - 3 minutes)

18 மாதங்களாக, வேல்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள் தங்கள் இன்டர்நெட் ஏன் தினமும் சரியாக காலை 7 மணிக்கு செயலிழக்கிறது என்று புரியாமல் குழம்பி போயிருந்தார்கள்.

 

இன்டர்நெட் தொடர்பு பற்றி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால், அந்த இன்டர்நெட் கம்பெனியின் ஊழியர்கள் பலமுறை அந்த கிராமத்திற்கு வருகை தந்தனர். அவர்களால் அங்கே எந்த குறையையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் அந்தப் பகுதியில் இருந்த கேபிள்களை மாற்றியமைத்து சிக்கலைத் தீர்க்க முயன்றனர். இருந்தாலும் ஒரு பயனும் இல்லை.

 

கடைசியாக பொறியாளர்கள் ஸ்பெக்ட்ரம் அனலைசர் என்று அழைக்கப்படும் ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி, காலை 6 மணி முதல் அந்த கிராமத்தின் தெருக்களின் மேலேயும் கீழேயும் நடந்து சென்றனர்.

சரியாக காலை 7 மணிக்கு அந்த கிராமத்தில் எங்கேயோ இருந்து வந்த பெரிய மின் குறுக்கீட்டின் காரணமாக இன்டர்நெட் செயலிழப்பதை கண்டுப்பிடித்தார்கள்.

அப்படி பாதிப்பைக் கொடுக்கும் சாதனம் எது என கண்டுப்பிடிக்க முயன்றார்கள். அந்த மின் பாதிப்பு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து உருவாவது கண்டுபிடிக்கப்பட்டது.

தினமும் காலை 7 மணியளவில் அந்த வீட்டின் சொந்தக்காரர் தன் பழைய டிவியை 📺📺 ஆன் செய்து செய்திகள் பார்ப்பார். இது தான் அந்த முழு கிராமத்தின் பிராட்பேண்டையும் தினமும் நாக் அவுட் செய்வது!

அந்த டிவியின் உரிமையாளர் அந்த டிவியை இனிமேல் பயன்படுத்துவது இல்லை என்று உறுதி அளித்துள்ளார்.

அந்த பழைய டிவி ஓய்வு பெற்றதிலிருந்து இன்டர்நெட் இணைப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கிராமத்தினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்!

ஒருவழியாக இந்த இன்டர்நெட் இணைப்பு கட் ஆகும் மிஸ்டரி முடிவுக்கு வந்திருக்கிறது.

🙄🙄🙄🙄

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.