Page 3 of 3
வெளியே பாலைப் பொழிவதுபோல் நிலவு வீசிக்கொண்டிருந்தது. களி நடனம் புரியும் மோகன சந்திரிகையிலே, ஸரஸ்வதியின் குரல் இனிமையோடு, இழைந்து வரும் வீணா கானம் ஒவ்வொருவர் உள்ளத்தில் ஒவ்வொருவிதமான உணர்ச்சியை ஊறச் செய்தது.
'ஷண்முகப்பிரியா' ராகத்தில், 'வள்ளி நாயகனே' என்கிற கீர்த்தனத்தை முடித்த ஸரஸ்வதி 'சங்கராபரண' த்தில் ஒரு ஜாவளியையும் வாசித்தாள். மதுர கீதத்தைப் பருகியவாறு அங்கிருந்தவர்கள் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர்.
------------
தொடரும்