கணவன் கேட்கும் வார்த்தைகளுக்குப் பதில் கூறாமல் இருந்தாள் அவள்.
ஓர் இரவு கணவனும், மனைவியும் தனியாகச் சந்திக்கும் போது சாவித்திரியின் கண்கள் கோவைப் பழம்போல் அழுது சிவந்திருந்தன. திறந்த மாடியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்த வண்ணம் தொலைவில் தெரியும் ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் சாவித்திரி.
அடிமேல் அடிவைத்து உள்ளம் சிலிர்க்க, தன்னை நாடிவரும் ரகுபதியை அவள் கவனிக்கவில்லை. மங்கிய நிலாவில் மனைவியின் முகத்தைத் திருப்பி அவன் பார்த்தபோது கண்களிலிருந்து கண் ணீர் முத்துக்கள் போல் கன்னங்களில் உருண்டன. ஏன் சாவித்திரி அழுகிறாள்? பல குடும்பங்களில் இன்றும் நடக்கும் மாமியார். நாட்டுப் பெண் சண்டை தன் குடும்பத்தில் தோன்றிவிட்டதா என்று ரகுபதி ஐயுற்றான். பிறகு அன்புடன், "சாவித்திரி! ஏன் அழுகிறாய்?" என்று கேட்டு அவள் கண்ணீரைத் துடைத்தான்.
-------------
தொடரும்