Page 5 of 5
கபடமற்ற இந்தப் பேதைப் பெண்ணைப் பார்த்துச் சாவித்திரிக்கு இரக்கம் தோன்றாமல் பொறாமை ஏற்பட்டிருப்பதும் ஆச்சர்யந்தான். ஸ்வர்ணம் கண்ணீர் பெருகச் செயலிழந்து உட்கார்ந்திருந்தாள். அத்தையின் தோளில் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு ஸரஸ்வதி கண்ணீர் உகுத்தாள்.
வானவெளியில் மனம் போனபடி ஆடிப் பாடிப் பறந்து செல்லும் வானம்பாடியைப் பிடித்து யாரோ கூட்டில் அடைத்துச் செய்யுளும், இலக்கணமும் கற்றுக்கொடுக்கும் கட்டுப்பாடான நிலையை அடைந்து ஸரஸ்வதியின் மனம் வேதனையுற்றது. ஒருவருக்காக அவள் தன் சங்கீதக் கலையை அப்யாசிக்காமல் விட்டு விடவும் மனம் ஒப்பவில்லை.
--------------
தொடரும்