Page 4 of 4
மனம் சலித்து விட்டுவிடுகிறார்" என்றாள் சீதா.
"அடேயப்பா! இதுதானா விஷயம்?" என்று மங்களம் ஒரு பெருமூச்சு விட்டாள். இதுவரையில் இவர்கள் பேச்சைக் கவனித்த சந்துரு உதட்டை மடித்துக் கொண்டே
சீதாவைப் பார்த்தான்.
”ஒருவேளை நாளைக் காலை வண்டியில் அத்திம்பேர் சாவித்திரியைத் தேடிக்கொண்டு வந்தாலும் வருவார்" என்று சீதா கூறியதும், "வரட்டுமே. தயாராக ஆரத்தி கரைத்து வை! வந்ததும் திருஷ்டி கழித்து ஆரத்தி சுற்றி நெற்றிக்குத் திலக மிட்டு உள்ளே அழைத்து வாயேண்டி. அசடே. . . ." என்று கூறிப் பல்லை நறநறவென்று கடித்தாள் சாவித்திரி.
--------------------
தொடரும்