(Reading time: 8 - 15 minutes)
Irulum oliyum
Irulum oliyum

என்று கேட்டு அவன் மனத்தைப் புண்ணாக்கினார்கள்.

" வேறு ஏதாவது விசேஷமோ?" என்று நண்பர் ஒருவர் குறும்புச் சிரிப்புடன் அவனைக் கேட்டார்.

"மாஸ்டர் ரகுபதி வரப்போகிறான் போலிருக்கிறது. விசேஷம் இருக்கிறது ஸார்!" என்றார் இன்னொருவர்.

"அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா" என்று மேலுக்குச் சிரித்து மழுப்பினான் ரகுபதி.

மேலும் அங்கு உட்கார்ந்திருந்தால் பேச்சை வளர்த்துவார்கள் என்று தோன்றியதால் வெளியே சென்றுவிட்டான் அவன். மறுபடியும் அவன் வீட்டுக்கு வந்தபோது தங்கமும், எரஸ்வதியும் கூடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அலமு அத்தை தன் கையில் நாலைந்து மிளகாயையும், உப்பையும் வைத்து அவர்கள் இருவருக்கும் சுழற்றி உள்ளே எரியும் அடுப்பில் போட்டாள். திருஷ்டி தோஷம் ஏற்பட்டுவிடுமாம்!

கட்டாயம் சுற்றிப்போடு அத்தை, என் கண்ணே பட்டு விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். 'சாதாரணமாகத்தான் பாடுவேன்' என்று சொல்லிவிட்டு ஜமாய்த்துத் தள்ளி நட்டாளே தங்கம்!" என்று தன் அதிசயத்தையும், சந்தோஷத்தையும் வெளியிட்டான் ரகுபதி.

"அவளுக்கு என்ன தெரியாது என்று நினைக்கிறாய்? பத்துப் பேர்களுக்குப் பேஷாகச் சமைத்துவிடுவாள். மணி மணியாகக் கோலங்கள் போடுவாள். வயலிலே போய்க் கதிரடிக்கச் சொல்; சேலைத் தலைப்பை வரிந்து கட்டிக்கொண்டு குடியானப் பெண் சருடன் கதிரடிப்பாள், குளத்திலே முழுகி நீச்சலடிப்பாள். ஆனால், அவளுக்கு ஆங்கிலம் படிக்க வராது. உடம்பு தெரிய இருளும் ஒளியும் உடைகள் உடுத்திக்கொண்டு உதட்டுக்குச் சாயம் பூசிக் கொள்ளத் தெரியாது" என்று அலமு ஆரம்பித்துவிட்டாள்.

"ஓஹோ !" என்றான் ரகுபதி. "உனக்கு நீந்தத் தெரியுமா? பலே! நான் கிராமத்துக்கு வந்தால் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பாயா தங்கம்?" என்று கேட்டான் ரகுபதி.

"போங்கள் அத்தான்! இந்தப் பெரியம்மாவுக்கு என்ன வேலை? எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பாள்!" என்று சிரித்துக்கொண்டே தங்கம் ஓடி மறைந்து விட்டாள்.

ஸரஸ்வதி ரகுபதியைப் பார்த்து, " என்ன அத்தான்! --கிராம யாத்திரை ஏதாவது போவதாக யோசனையோ?" என்று கேட்டாள்.

வரட்டுமே இங்கே உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறானாம்? பெண்டாட்டிதான் கோபித்துக்கொண்டு ஊரிலே போய் உட்கார்ந்திருக்கிறாள். இவன் போய் அவளை வேண்டி அழைத்துவர வேண்டுமாக்கும்! நன்றாக இருக்கிறது ஸ்திரீ சுதந்தரம்?" என்று அலமு சற்று இரைந்து கோபத்துடன் கூறினாள்.

"அப்பொழுது தங்கத்தையும் உங்களோடு அழைத்துட் போய் விடுவீர்களா என்ன?" என்று

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.