Page 4 of 4
வாசித்தது என் மனத்தை விட்டு அகலவே இல்லை. மறுபடியும் இன்று அதைக் கேட்க ஆசைப்படுகிறேன், ஸரஸ்வதி" என்று முறுவலுடன் கேட்டுக் கொண்டான் சந்துரு.
உறையிலிட்ட வீணையை வெளியே எடுத்து, 'ஷண்முகப் பிரியா'வை அழகாக வாசித்தாள் ஸரஸ்வதி. ஆவலுடன் அவளையே கவனிக்கும் சந்துருவை அவள் ஒரு முறைகூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.'
பழைய சம்பவங்களை நினைத்துப் பெருமூச்சுவிட்டான் சந்துரு. ஸரஸ்வதியின் மனம் ஒரு புதிர். வாக்தேவியின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமாக இருக்கும் அந்தப் பெண், ஒரு தெய்விகப் பிறவி என்பதாக நினைத்துச் சந்துரு வியப்பும், மகிழ்ச்சியும் எய்தினான். கடிதத்தை உறையிலிட்டு நிறைந்த மனத்தினனாக அதைத் தபாலில் அன்றே சேர்த்து விட்டான்.
-------------
தொடரும்