Page 3 of 3
அந்தணருக்குப் பிக்ஷை அளித்து விட்டுக் கீழே விழுந்து அவர் பாதங்களில் நமஸ்கரித்தாள்.
ரகுபதி இடியால் தாக்குண்டவன் போல் அயர்ந்து போய், கவிதையை நினைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டான்; அவன் செய்கை அவனுக்கே வெறுப்பை அளித்தது. 'சீ, சீ! என்ன நீச மனோபாவம்? மனிதன் வாழ்க்கையில் ஏமாற்றமடைந்து விட்டால் தான் என்ன? இப்படியா என் புத்தி பேதலிக்க வேண்டும்?' என்று வருந்தினான் அவன்.
அத்தை அலமு காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். "ஏண்டா அப்பா! தீபாவளிக்குப் போகாமல் இங்கேயே தங்கிவிட்டாயே. உன் அம்மாவுக்குத் தெரிந்தால் வீண் மனஸ்தாபம் ஏற்படுமே. ஸரஸ்வதி என்னை வெறுமனே விட மாட்டாளே, அப்பா!" என்றாள் அவள்.
ரகுபதி அவளுக்கு மறுமொழி கூறாமல் காப்பியை அருந்தி விட்டு வெளியே போய் விட்டான்.
-----------
தொடரும்