''பார்ப்பாங்க, பார்ப்பாங்க! நம்ம ரெண்டு பேரையும் வீட்டை விட்டே துரத்தப் பார்ப்பாங்க.”
"நீ கவலைப்படாதே! பிரின்ஸிபால் எங்க அத்தை தானே!”
இச்சமயம். சர்வர் வந்து 'என்ன வேண்டும்?' என்று விசாரித்தான்.
"நீ என்ன சாப்பிடுகிறாய் பாரதி?”
''வெறும் காப்பி போதும்.''
”வேறு ஏதாவது சாப்பிட்டேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு.''
”உங்களுக்கு எது பிடிக்குமோ, அதையே கொண்டு வரச் சொல்லுங்க” என்றாள் பாரதி,
”எனக்கா? எனக்குப் பிடிக்காதது இந்த உலகத்திலே ஒண்னே ஒண்ணுதான்'' என்றான் ராஜா.
''என்ன அது?''
”பயித்தியம் தான் பிடிக்காது” என்றான் அவன். டம்ளரிலிருந்த தண்ணீரைக் குடிக்க இருந்த பாரதி பகீரெனச் சிரித்துவிட்டாள்.
"நல்ல வேளை! இந்த ஜோக்கை நீ தண்ணீர் குடிக்கும்போது சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்!” என்றான் ராஜா.
''கால் டம்ளர் தண்ணீர் நஷ்டமாகியிருக்கும்'' என்று சொல்லிச் சிரித்தாள் பாரதி.
சர்வரைப் பார்த்து, ”உனக்குப் பிடித்தமானதைக் கொண்டு வாப்பா!'' என்றான் ராஜா.
”எனக்கு இந்த ஓட்டலில் போடுவது எதுவுமே பிடிக் காது ஸார்!'' என்றான் சர்வர்.
”சரி; அப்படியானால் இரண்டு கப் காப்பி மட்டும் கொண்டு வா, போதும்'' என்றாள் பாரதி.
காப்பி வருகிறவரை பாரதியின் ஜாக்ரபி புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான் ராஜா.
காப்பி வந்ததும் அதை அருந்தியபடியே அவன் வானத்தைப் பார்த்தபோது, வானமெங்கும் கருமேகங்கள் கவிந்து கொண்டிருந்தன.
”இறுக்கமாக இருக்கிறது. மழை வந்தாலும் வரலாம்'' என்றாள் பாரதி.
”வந்தாலும் என்ன? வந்து கொண்டே இருக்கிறது'' என்றான் ராஜா.
அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே படபடவென்று மழைத்துளிகள் மேஜை விரிப்பின் மீது சிதறின. இருவரும் அவசரம் அவசரமாகப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு தெருவுக்கு விரைந்து போய் ஒரு டாக்ஸியைப் பிடித்துக் கொண்டனர்.
தான் மட்டும் தனியாகப் பஸ்ஸில் போய்விடலாம் என்றுதான் பாரதி முதலில் திட்டமிட்டிருந்தாள். மழையும் ராஜாவும் சேர்ந்து சதி செய்ததுபோல் அவள் எண்ணத்
தையே மாற்றி விட்டார்கள்.
டாக்ஸி பாரதியின் வீட்டு வாசலில் போய் நின்றபோது மழை சோவெனக் கொட்டிக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக அவள் ராஜாவுடன் வந்து இறங்கியதை ஒருவரும்