கவனிக்கவில்லை.
அப்போது மணி ஏழு ஆகிவிடவே, நன்கு இருட்டிப் போயிற்று. டாக்ஸியிலிருந்து இறங்கிய பாரதி பங்களாவுக்குள் போவதற்குள் லேசாக நனைந்து விட்டாள். நெஞ்சு பட படக்க அவள் உள்ளே செல்லும்போதே அப்பா அவருடைய அறையில் இருக்கிறாரா என்று கவனித்துக் கொண்டாள்.
”அறைக் கதவு ஒரு பென்ஸில் கனத்துக்கு லேசாகத் திறந்திருப்பது தெரிந்தது. திறந்த கதவின் இடுக்கு வழியாக வெளிப்பட்ட மின் ஒளி தாழ்வாரத்தில் படிந்திருந்தது.
உள்ளே மின் விசிறி சுழன்று கொண்டிருப்பதையும், அப்பா ஏதோ வேலையில் மூழ்கியிருப்பதையும் கண்டபோது அவள் திடுக்கிட்டாள். ”அப்பாவுக்குக் காது ரொம்பக் கூர்மை. வாசலில் டாக்ஸி வந்து நின்றபோது அவர் கட்டா யம் அதைக் கவனித்திருப்பார். தன்னை அழைத்து ஏன் இத்தனை நேரம்? எங்கே போயிருந்தாய்?' என்று விசாரித் தால் என்ன பதில் சொல்லுவது என்ற திகிலுடன் மெதுவாகப் பூனை போல் நடந்து சென்றாள்.
"பாரதி!'' சேதுபதிதான் அழைத்தார். அவர் குரலில் எப்போதுமே நயம் இருந்ததில்லை. இன்று வழக்கத்தைக் காட்டிலும் சற்று கடுமையாகவே ஒலித்தது.
பரம சாதுவைபோல் அவர் எதிரில் போய் நின்றாள் பாரதி.
"இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?' சேதுபதி கேட்டார்.
”காலேஜில் தான் இருந்தேன் அப்பா! ஹாஸ்டலில் ஒரு பெண்ணிடம் கணக்குப் பாடம் கற்றுக்கொண்டிருந்தேன்'' என்று துணிந்து பொய்யைச் சொன்னாள் பாரதி.
சேதுபதி ஒரு முறை அவளை ஏற இறங்கப் பார்த்தார். அவள் பொய் சொல்கிறாள் என்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்து விட்டது. அதைப் புரிந்து கொண்ட சேதுபதி அவளுடைய பொய்யை அம்பலமாக்க விரும்பவில்லை. தான் அதை அறிந்து கொண்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. காரணம், அப்படிச் செய்வதால் தன்னிடம் அவளுக்குள்ள பயமும் மரியாதையும் குறைந்துவிடும் என்பது தான்.
“கணக்கில் 'வீக்' என்றால் என்னிடம் சொல்லுவதற் கென்ன? உடனே டியூஷன் வைப்பதற்கு ஏற்பாடு செய்திருப் பேன் அல்லவா? சரி; இனிமேல் இம்மாதிரி நேரம் கழித்து வீட்டுக்கு வரக்கூடாது, தெரிந்ததா? இதற்கு முன்னால் கூட இரண்டு நாள் நீ நேரம் கழித்து வந்திருக்கிறாய்'' என்றார்.
”தான் இரண்டு நாட்கள் லேட்டாக வந்தது அப்பாவுக்கு எப்படித் தெரிந்தது? இவ்வளவு கணக்காகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாரே!'' பாரதி சிந்தித்தாள்.
''சரி; நீ போகலாம்" என்று கூறி அனுப்பினார் சேதுபதி.
மறுநாள் காலை, சேதுபதி தம்முடைய அறையில் உட் கார்ந்து பத்திரிகையைப் படித்துக்