தம் மகளிடம் பார்வதி எடுத்துக் கொண்டுள்ள அக்கறையைச் சேதுபதியால் புரிந்து கொள்ள முடிந்தது. எவ்வளவு நாசூக்காகச் சிரித்துக் கொண்டே விஷயத்தைக் கூறிவிட்டாள் என்று தனக்குள்ளாகவே வியந்து கொண்டார்.
"அப்படியானால் அவளுக்கு யாராவது ஒரு புரொபஸ்ரைக் கொண்டு டியூஷன் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்ய முடியுமா?'' சேதுபதி கேட்டார்.
''யாராவது ஒரு புரொபஸர் என்ன? உங்களுக்கு ஆட் சேபனை இல்லையென்றால் நானே வந்து சொல்லித் தருகிறேன்'' என்றாள் பார்வதி.
“பாரதி விஷயத்தில் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு வந்தது பற்றி மிக்க நன்றி. தங்களுக்குள்ள வேலைகளுக் கிடையில் தாங்களே டியூஷனுக்கு வருவது........" என்று இழுத்தார் சேதுபதி.
''அதனால் பரவாயில்லை; ஒழிவு நேரங்களில் தான் வரப் போகிறேன்.''
சேதுபதிக்கு அந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பார்வதியை இனி அடிக்கடி சந்திக்கலாம் என்பதை நினைக்கும்போது, அவர் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது. அவளைச் சந்திப்பதில், அவளைக் காண்பதில், அவளுடன் பேசுவதில், அவளைப்-பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதில் தனக்கு ஏன் இத்தனைக் குதூகலம்? அதற்கு என்ன காரணம்? அவருக்கே அது விளங்கவில்லை.
---------------
தொடரும்