மெதுவாக அடிமேல் அடி வைத்தவளாய், தன் தந்தைக்குத் தெரியாமல் வீட்டுக்குள் சென்றுவிட எண்ணினாள். நடு ஹாலில் படுத்திருக்கும் சேதுபதியைக் கண்டதும் திடுக்கிட்டுப்போன பாரதி, முன்னொரு நாள் தான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது "இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?' என்று தந்தை கேட்டதும், தான் அதற்குக் கல்லூரி ஹாஸ்டல் மாணவி யுடன் கணக்குப் பாடம் கற்றுக் கொண்டிருந்ததாகப் பொய் சொன்னதும், தான் கூறிய அதைப் பொய்யென்று புரிந்து கொண்ட அப்பா, அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் வார்த்தைகளை நிஜமென்று நம்புவது போல் நடந்து கொண்டதும் அவள் நினைவுக்கு வந்தன.
அப்பா தூங்குகிறாரா என்று கடைக் கண்ணால் கவனித் துக்கொண்டாள். சேதுபதிக்குக் காது ரொம்பக் கூர்மை. தூங்கிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் நிழலாடினாலும் அறிந்து கொண்டுவிடுகிற சூட்சுமமான அறிவு அவருக்கு உண்டு. இன்று பாரதி வரும்போது அவர் விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தார். மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது என்பதையும், பாரதி லேட்டாக வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்பதையும் அவர் உணராமலில்லை. ஆயினும் பயந்தபடியே உள்ளே வந்து கொண்டிருந்த பாரதியை அவர் கண்டிக்க விரும்பவில்லை. எந்தவித உணர்ச்சியையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மாலை ஐந்து மணிக்குக் கல்லூரியிலிருந்து வரும் பாரதியை எப்படி வரவேற்பாரோ அவ்வாறே வரவேற்றார்.
"என்ன பாரதி. யாரோ ஒரு பிரண்டைப் பார்க்கப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றாயே, பார்த்து விட்டாயா?' என்று சகஜமாக விசாரித்தார்.
''ஆமாம்'' என்று மெல்லிய குரலில் பதில் கூறினாள் பாரதி.
"இத்தனை நேரம் சாப்பிடாமலா பேசிக்கொண்டிருந் தாய் வா, வா, உள்ளே போய்ச் சாப்பிடலாம். உனக்காக நானும் சாப்பிடாமல் காத்திருக்கிறேன்'' என்று அன்பும் பரிவும் கலந்த குரலில் வரவேற்றார். தந்தையின் அன்பு மொழிகளில் பாரதி மெய் சிலிர்த்துப்போனாள். அப்பாவா இப்படிப் பேசுகிறார்? நிஜமாகவேதான் இப்படிக் கூறுகிறாரா? அல்லது கோபத்தை விழுங்கிவிட்டு மேலாக அன்பொழுகப் பேசு கிறாரா?
"ஏன் லேட்?' என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே! நிஜமாகவே என் மீது கோபமில்லையா? அவருடைய சாந்த மான பேச்சும், அன்பும் வரவேற்பும் பாரதிக்குப் பெரும் வேதனையை அளித்தன.
'அப்பா! நான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்திருக்கிறேன். இப்போது மணி ஒன்பது; தயவு செய்து என்னைக் கொஞ்சம் கோபித்துக் கொள்ளுங்கள் அப்பா!' என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்ள வேண்டும் போலிருந்தது. தன்னை அவர் கோபமாக நாலு வார்த்தை திட்டி அனுப்பினால்தான் உள்ளம் அமைதியுறும் போல் தோன்றியது. ஆனாலும் தன் வேதனையை