(Reading time: 12 - 24 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

பார்த்தாள். காரைக் காணவில்லை. கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்து அடிக்க ஐந்து நிமிஷம்! ஏமாற்றத்துடன் சென்று விட்டாள் அகாதா.

வழக்கம்போல் அட்டெண்டர் ரங்கசாமி பத்தடிக்க ஐந்து நிமிஷத்துக்குக் கார்க்கதவைத் திறக்க ஓடிவருகிறான்; காரைக் காணவில்லை. முகத்தில் கேள்விக் குறியுடன் திரும்பிச் செல்கிறான்.

சரியாகப் பத்தேகால் மணிக்குப் பார்வதியின் கார் கல்லூரிக் காம்பவுண்டுச் சுவரை நெருங்கியபோது எதிரிலிருந்த காலேஜ் புத்தகக் கடைக்கார அம்பாள் கடிகாரத்தைப் பார்க்கிறாள். அது சரியாக ஓடுகிறதா என்ற சந்தேகம் வந்து விடுகிறது அவளுக்கு. பார்வதியின் காரைக் கண்டதும் அவள் கடிகாரத்தின் முள்ளைத் திருப்பிப் பத்தடிக்க ஐந்து நிமிஷத்துக்கு மாற்றி விடுகிறாள். பார்வதியின் கார் வந்தால், மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம் என்பது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை.

பார்வதி இன்று லேட்டாக வந்தபோது அந்தக் கண்களுக்குப் பார்வதியின் மேல் நம்பிக்கை குறையவில்லை. கடிகாரத்தில் பழுது இருப்பதாகவே தோன்றியது.

பார்வதி தன் அறைக்குள் சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த டெலிபோன் மணி அடித்துக்கொண்டிருந்தது.

பார்வதி ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டாள். சேதுபதியின் குரல் என்ன சேதுபதியா! அவளுக்கு வியர்த்துப் போயிற்று.

", நீங்களா? என்ன வேண்டும்?@ பற்றுதல் எதுவும் மின்றி உணர்ச்சியற்ற குரலில் பேசினாள் பார்வதி.

பாரதி சொன்னாள், தங்களுக்கு உடம்பு சரியில்லை யென்று.... இப்போது எப்படி இருக்கிறது?”

இப்போது ஒன்றுமில்லை... தாங்க்ஸ்...” சட்டென ரிஸீவரை வைத்துவிட்டாள் பார்வதி.

அவள் இதயம் படபடத்தது. ”இவர் எதற்காக என்னைப்பற்றி விசாரிக்க வேண்டும்? இவரை நான் மறக்க முயன்றாலும் முடியவில்லையே? ஒருவேளை இவர் என்னை நேசிக்கிறாரோ? அவர் உள்ளத்தில் எனக்கு இடமளித்திருக்கிறாரோ? அவரை நான் மறந்துவிடப் போகிறேன்; அதைப் போல் அவரும் என்னை மறந்துவிட வேண்டும். அப்போது தான் நான் நிம்மதியுடன் வாழமுடியும்”. திடமான, தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தாள் பார்வதி.

மணி மூன்று இருக்கும். பி.எஸ்ஸி. வகுப்புக்கு ஜாக்ரபி போதிக்கும் கடமை அவளை அழைத்தது.

பார்வதி, தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் தன் கடமையைச் செய்யப் புறப்பட்டாள். மெதுவாக நடந்து வகுப்புக்குள் நுழைந்தபோது, அவளுக்குத் தலை சுற்றியது. அதையும் பொறுத்துக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்து மேடைமீது ஏறினாள். கால்கள் தடுமாறின. மயக்கமுற்றுக் கீழே சாய்ந்துவிட்டாள்.

------------

தொடரும்

Go to Visiri vazhai story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.