கவனித்தாள். தன் கண்களில் பெருகி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பார்வதி, "என்னால் அவரை மறக்க முடிய வில்லை...” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.
மறுநாள் காலை. மணி எட்டுகூட அடித்திருக்காது. பாரதியையும், தங்கை காமாட்சியையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் சேதுபதி. காரிலிருந்து இறங்கியவர் நேராக மாடிக்குச் சென்று பார்வதி படுத்திருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தார். பார்வதி அயர்ந்து தூங்கிக்கொண் டிருந்தாள். மெதுவாக அந்த அறைக்குள் சென்ற சேதுபதி, தன் கையோடு கொண்டு வந்திருந்த பழங்களை எடுத்துப் பக்கத்திலிருந்த மேஜை மீது வைத்தார். அவ்வளவும் மாதுளம் கனிகள்!
'அத்தைக்கு மாதுளம் பழம் என்றால் ரொம்பவும் பிடிக்கும்' என்று முதல் நாள் இரவு ராஜா டாக்டரிடம் கூறியதும், ’பழத்தை ஜூஸாகப் பிழிந்து கொடேன்' என்று டாக்டர் பதில் கூறியதும் சேதுபதியின் காதில் விழுந்திருக்க வேண்டும். அவர் சந்தடியின்றிப் பழங்களை வைத்துவிட்டுப் புறப்பட்டபோது பார்வதி சட்டென்று கண் விழித்துக் கொண்டு ''நீங்களா? இப்போது எதற்கு வந்தீர்கள்? மாதுளம் பழங்களெல்லாம் ஏது?....'' என்று கேட்டாள்.
”என் தங்கையை அழைத்து வந்தேன். அவள் தங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வாள். எனக்குக் கொஞ்சம் அவசர வேலை யிருக்கிறது! நான் மறுபடியும் மாலையில் வந்து பார்க்கிறேன். நீங்கள் அதிகம் பேசக்கூடாது. மனசுக்கு அமைதியும் உடலுக்கு ஓய்வும் மிக முக்கியமாம். டாக்டர் கூறியிருக்கிறார்”. மேலே எதுவுமே சொல்லாமல் புறப்பட்டு விட்டார் சேதுபதி.
'இவர் யாரோ? நான் யாரோ? இவர் எதற்காக எனக்கு இத்தனை உபசாரம் செய்ய வேண்டும்? நான் இவரை மறக்க நினைக்கும்போது இவர் ஏன் என் மீது அளவற்ற அன்பைப் பொழிகிறார்? எனக்கு மாதுளம் பழத்தின் மீது ஆசை என்பது இவருக்கு எப்படித் தெரிந்தது! ராஜா கூறியிருப்பானோ?' 'ராஜா!'' என்று அழைத்தாள்.
"கூப்பிட்டிர்களா அத்தை?'' என்று கேட்டுக்கொண்டே வந்தான் ராஜா.
"ஆமாம்; மாதுளம்பழம் இங்கே எப்படி வந்தது?”
"தெரியாதே! ஒருவேளை சேதுபதி வந்திருப்பார்”
”அவருக்கு யார் சொன்னது? டாக்டர் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒருவேளை அது அவர் காதில் விழுந்திருக்கலாம்...''
"ஓ!....”
''ஏன் அத்தை சாப்பிடறீங்களா, ஜூஸ் பிழிஞ்சுக் கொடுக்கிறேன்...”
ஆர்வத்துடன் கேட்டான் ராஜா...
"வேண்டாம்...'' அலட்சியத்துடன் சாரமற்ற குரலில் பதில் கூறினாள் பார்வதி. அதில் வெறுப்பும்