கம்பீரமான தோற்றமும், பெருந்தன்மை மிக்க பேச்சு, பேச்சிலே கனிந்த அன்பு எல்லாவற்றையும் ஒருமுறை எண்ணிப் பார்த்தாள்.
அவர் மாடிப்படிகளில் நடக்கும்போது, ஒவ்வொரு படியாகக் காலடி எடுத்து வைக்கும் ஓசையைக் கவனமாகக் கேட்கலானாள்.
'அவரை நேரில் காணும்போது ஆசை, அன்பு, பாசம், பரிவு எதுவுமே இல்லாதவள் போல் வெறுப்பாகப் பேசு கிறேன். அவர் கண்களிலிருந்து மறைந்ததும் அவரைக் காணத் துடிக்கிறது என் உள்ளம். ஐயோ, இதென்ன விசித் திரம்? இந்த வேதனை-யிலிருந்து எனக்கு விடுதலையே கிடையாதா?
அவள் துக்கமெல்லாம் கண்ணீராகப் பெருகிக்கொண்டிருந்தது.
கீழே, சேதுபதி யாருடனோ பேசிக்கொண்டிருப்பது கேட்கவே அதை உற்றுக் கவனித்தாள்.
"காமாட்சி! நான் அப்புறம் வருகிறேன். பார்வதியின் உடம்பு குணமாகிறவரை, நீ இங்கேயே இருந்து கவனித்துக் கொள். அவர் மனத்தில் எதையோ வைத்துக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் சஞ்சலப்படுவதுபோல் தோன்றுகிறது. அவர் படித்தவர். அத்துடன் சிறந்த அறிவாளி...."
சேதுபதியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பார்வதியின் நெஞ்சத்துக்குள் புகுந்து மாதுளை முத்துகளாய் இனித்தன.
”என்னிடம் இவர் எத்தனை மதிப்பு வைத்திருக்கிறார்? எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்? என் உள்ளத்தை எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.”
மீண்டும் அவருடைய குரல் கேட்கிறது.
"பாரதி! நான் வீட்டுக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா என்னுடன்...''
”நான் இங்கேயே இருக்கிறேன், அப்பா! அத்தை இங்கே இருக்கும்போது எனக்கு மட்டும் அங்கே என்ன வேலை? பிரின்ஸிபாலுக்கு உடம்பு குணமாகிறவரை நானும் அத்தையோடுதான் இருக்கப் போகிறேன்'' என்றான் பாரதி.
”பேஷ்! அதுதான் சரி; உன் இஷ்டப்படியே செய்; ஆனால் உன் பிரின்ஸிபாலுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. நீயாகவே படித்துப் பாஸ் செய்ய வேண்டும். தெரிந்ததா?”
கார் புறப்பட்டு வாசல் காம்பவுண்டைத் தாண்டிச் செல்லுகிறது.
பார்வதி அந்த மாதுளங் கனிகளைக் கவனித்தான். அந்தச் சிவந்த முத்துகள் அவளைப் பார்த்துச் சிரித்தன. 'பயித்தியமே! உன்மீது இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்டிருக்கும் சேதுபதியையா அலட்சியம் செய்கிறாய்?’ என்பதுபோல் தோன்றுகிறது.
ஹார்லிக்ஸுடன் வந்து நின்ற காமாட்சியைக் கண்டதும் ”இப்படி உட்காருங்கள்'' என்று கை காட்டினான். பார்வதி