“லைப்ரரிக்கு”
”அப்புறம்?''
“ஓட்டலுக்கு.''
”அப்புறம்?'' சினிமாவுக்கு! இருவரும் காரை நோக்கி நடந்தனர். திடீரென்று பாரதி "ஐயோ!'' என்று கூறிக்கொண்டே கீழே குனிந்தாள்.
”என்ன பாரதி!'' பதறிப் போனான் ராஜா.
"காலில் முள் தைத்துவிட்டது.''
ராஜா மெதுவாக அவள் வலது காலைத் தூக்கி அருகி லிருந்த ஒரு பெரிய கல் மீது வைத்தான். பிறகு அவள் காலிலிருந்த முள்ளை அப்புறப்படுத்தினான். முள்ளை எடுத்து இடத்திலிருந்து ரத்தம் பெருகியது. உடனே அவன் தன் கைக்குட்டையால் அவள் காலில் ஒரு கட்டுப் போட்டு அவள் கையைப் பிடித்துக் காருக்கு அழைத்துச் சென்றான். போகும் போது "அன்று ஹாஸ்டலில் ஆணி அடிக்கும்போது பாணிக் கிரகணம் ஆயிற்று. இன்று வலது காலைத் தூக்கி அம்மிக் கல்லில் வைத்தாயிற்று' என்று சிரித்தான் ராஜா. அதைக் கேட்டுப் பாரதியும் சிரித்துவிட்டாள்!
---------------
தொடரும்