(Reading time: 11 - 21 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

''இது பொய் இல்லை,பாரதி!

'பின் என்னவாம்?’

புளுகு!”

'புளுகுக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம்!''

''புளுகிலே பிறத்தியாருக்குத் தீங்கு கிடையாது..... பொய்யிலே அது உண்டு...''

''அப்படின்னா நான் சிநேகிதிகளோடு சினிமாவுக்குப் போறதாச் சொன்னது பொய்தானே?”

''இல்லை ; புளுகு...”

''எனக்கென்னவோ பயமாயிருக்குது... நாம் ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டுச் சினிமாவுக்குப் போயிருக்கோம்னு பிரின்ஸிபாலுக்குத் தெரிஞ்சுதானா?....''

"ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீ தான் பர்மிஷன் வாங்கியிருக்கியே!”

"நீங்க வாங்கலையே!”

''நான் சினிமாவுக்குப் போகலையே. கல்லூரி ஆண்டு விழாவில் இருந்தல்லவா வர்றேன். அதனாலே லேட்!”

"சுத்தப் பொய்!”

"மறுபடியும் பார்த்தாயா! புளுகுன்னு சொல்லு!”

"எல்பின்ஸ்டனுக்குப் போறீங்களா?' டிரைவர் கேட்டான்.

''முதல்லே லைப்ரரிக்குப் போ. அதோ தெரியுது பார் ! அந்தக் கட்டடத்துக்கு முன்னாலே நிறுத்து...'' என்றான் ராஜா.

டாக்ஸி அங்கே போய் நின்றதும் ராஜாவும் பாரதியும் இறங்கி லைப்ரரிக்குள் சென்றனர்..

''என்னை அனுப்பிடுங்க ஸார்! வெயிட்டிங்லே போடாதீங்க. சம்பாதிக்கிற நேரம்" என்றான் டிரைவர்.

''அதுவும் சரிதான்!'' என்று கூறிய ராஜா, அவனுக்கு மீட்டருக்கு மேல் அதிகப்படியாகவே ஒரு ரூபாய் கொடுத் தனுப்பினான்.

''ரொம்ப சந்தோஷங்கள்” என்று கூறிச் சென்றான் டிரைவர்.

அரை மணி நேரம் கழித்து ராஜாவும் பாரதியும் வெளியே வந்து டாக்ஸிக்காகக் காத்திருந்தபோது அதே டாக்ஸி அருகில் வந்து நின்றதும் பாரதிக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை.

''நீயே வந்து விட்டாயா?'' என்றான் ராஜா.

ஆமாங்க. இதுக்குள்ளே மாம்பலத்துக்கு ஒரு சவாரி கிடைச்சுது. போயிட்டு வந்தேன். ஏறிக்குங்க.... ஓட்டலுக் குத்தானே?....''

"ஆமாம்...''

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.