(Reading time: 11 - 21 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

எந்த ஓட்டலுக்கு ?' என்று கேட்டான் டாக்ஸி டிரைவர்.

முன்னொரு நாள் திறந்த வெளி மாடியில் சாப்பிட்டோமே.-அந்த ஓட்ட்லுக்கே போகலாம்” என்றாள் பாரதி.

டாக்ஸியை அந்த ஓட்டலுக்கு விடச் சொன்னான் ராஜா.

பக்கத்திலே தான் சினிமா. நாங்கள் நடந்தே போய் விடுகிறோம். நீ காத்திருக்க வேண்டாம்” என்று கூறிய ராஜா, டிரைவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பினான்.

பிறகு இருவரும் அந்த ஓட்டலுக்குச் சென்று திறந்த வெளி மாடிக்குப் போய் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டனர்.

"என்ன சாப்பிடறீங்க?'' என்று கேட்டுக்கொண்டே வந்தான் ஸர்வர்.

அவனிடம் இரண்டு மசாலா தோசைக்கு ஆர்டர் கொடுத்தான் ராஜா.

எனக்கு மசாலா தோசை பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்" என்று கேட்டாள் பாரதி.

"எனக்குத் தெரியாது; மசாலா தோசைக்குச் சொன்னால் அது வருகிற வரைக்கும் கொஞ்சம் பொழுது போகுமே என்பதற்காகச் சொன்னேன்...'' என்றான் ராஜா.

பாரதி சிரித்துக்கொண்டே அந்த லைப்ரரி புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள்.

''மசாலா தோசை வருவதற்குள் நீ இதைப் படித்தே முடித்துவிடலாம்” என்றான் ராஜா.

''ரொம்ப ட்ரை ஸப்ஜெக்ட்! பிலாஸபி இதைப் போய் வாங்கி வந்தீர்களே!' என்றாள் பாரதி.

இது உனக்கல்ல; அத்தைக்கு. இந்த மாதிரி ட்ரை ஸப்ஜெக்ட்தான் அவங்களுக்குப் பிடிக்கும்...''

சற்று நேரத்துக்கெல்லாம் மசாலா தோசை இரண்டைக் கொண்டு வந்து வைத்தான் ஸர்வர். பாரதி தோசையின் முறுகலான பாகங்களை மட்டும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்.

''மசாலா தோசையைக் கண்டுபிடித்தானே அவனுக்கு ஒரு சிலை கட்டி வைக்க வேண்டும்...' என்றான் ராஜா.

"ஐஸ்க்ரீம் கண்டுபிடித்தவனுக்கும் தான்” என்றான் பாரதி.

"இப்போது ஐஸ்க்ரீம் வேணும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாயா?'' என்று கேட்டுவிட்டுச் சிரித்தான் ராஜா.

"இல்லை, இல்லை'' என்றாள் பாரதி.

ஸர்வரைக கூப்பிடுவதற்காக ராஜா திரும்பிப் பார்த்த போது வேறொரு மூலையில் அவனுடைய காலேஜ் பிரின்ஸி பால் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அவன் 'திருதிருவென்று விழிப்பதைக் கண்ட பாரதி, ''ஏன் ராஜா! ஏன் இப்படி இஞ்சி தின்ற மாதிரி விழிக்கிறீங்க...?'' என்று கேட்டாள்.

''நிஜமாகவே இந்த மசாலாவிலே இருந்த ஓர் இஞ்சித் துண்டைத் தின்னு விட்டேன்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.