(Reading time: 12 - 23 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

என்னைக் காரில் அழைத் துக்கொண் போகிறாயா?''

''என்ன அத்தை இது! மணி பதினொன்று அடிக்கப் போகிறது. இராத்திரி வேளை. உங்க உடம்பு இருக்கிற நிலையிலே வெளியிலே போவதா?''

தடங்கல் சொல்லாதே ராஜா! நான் இப்போதே போய்ப் பார்க்க வேண்டும் நீதான் உதவி செய்யவேண்டும். உன் தோளைப் பற்றிக்கொண்டு நான் மெதுவாகக் கீழே இறங்கி வந்து விடுகிறேன்...''

''அத்தை எனக்குப் பயமாயிருக்கிறது. சேதுபதிக்குத் தெரிந்தால் என்னைக் கோபித்துக் கொள்ளுவார். நான் வர மாட்டேன்...”

"நீ வரமாட்டாயா ராஜா? கண்டிப்பாய்க் கேட்கிறேன். ஒரே வார்த்தைதான்; சொல்லி விடு. முடியாதா?''

ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தயங்கினான், கடைசியில் அத்தையின் பேச்சைத் தட்ட முடியாமல் "சரி அத்தை புறப்படுங்க...'' என்றான்.

அடுத்த கணமே பார்வதி கட்டிலை விட்டு மெதுவாக எழுந்தாள். ஞானத்தைத் தவிர, வீட்டில் எல்லோருமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

பார்வதி ஞானத்தை அழைத்து, ''கல்லூரிக்குப் போய் விட்டு அரை மணியில் திரும்பி வந்து விடுகிறேன். வீட்டைப் பார்த்துக்கொள்'' என்று புறப்பட்டாள்.

ஞானம் தடுக்கவில்லை. வெளியில் புறப்படும்போது தடையாக எதுவும் சொல்ல விரும்பாததால் மெளனமாகத் தலை யசைப்பதைத் தவிர, அவளால் வேறு ஒன்றும் செய்ய முடிய வில்லை.

---------------

தொடரும்

Go to Visiri vazhai story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.