Page 5 of 5
அருகே நெருங்கி உட்கார்ந்து கொண்டு, அவளை தனது வலத்தோளில் படும்படியாய் அணைத்துக் கொண்டாள்.
மல்லிகா, சிரித்துக் கொண்டே, “நான் ஒண்ணும் கோபமும் படல, வருத்தமும் படல. நீங்கள் யாரைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும், எனக்குக் கவலையில்லை. என் கவலையெல்லாம் நீங்கள் சண்டை போடக் கூடாது என்கிறதுதான்” என்று சொல்லிக் கொண்டே, அவர்கள் இருவரின் கைகளையும், தன் இரு கரங்களால் பலமாகப் பிடித்துக் கொண்டாள்.
அந்தப் பிடியின் பலத்தை கணக்கில் வைத்துப் பார்த்தால், மல்லிகா, ஏதோ பலவீனப்பட்டுக் கொண்டு இருப்பது போல் தோன்றியது.
அவர்களின் கைகளைப் பிடித்திருப்பது, “என்னை கைவிட மாட்டீர்களே” என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.
--------------
தொடரும்