Page 11 of 11
வரைமுறை வேண்டாம்? உனக்கு அறிவிருக்கா... அந்த ஓணான் பயலுக்கா இவளை கொடுக்கச் சொல்ற... இனிமேல், இப்படிப்பட்ட வார்த்தையைக் கேட்டால், நான் பொல்லாதவனாய் மாறிடுவேன். ஜாக்கிரதை.”
பார்வதி புரண்டு படுத்தாள். மல்லிகா ஆரம்பத்தில் குழந்தையாக இருக்கும் போது, அவள் மீது ஏற்பட்ட வெறுப்பு, இதுவரை அவளுக்குத் தெரியாமலே அடி மனதில் பதிந்து இருந்தது. அந்த உளைச்சல் இப்போது விஸ்வரூபம் எடுத்தது. ராமன் இருக்க வேண்டிய இடத்தில், இன்னொருத்தியின் மகள், ஒரு குடிகாரன் பெற்ற பெண் இருக்கிறாள் என்று நினைத்து நினைத்து அவள் பேயாக மாறிக் கொண்டிருந்தாள்.
--------------
தொடரும்