Page 3 of 3
“சரி. எனக்கு மூளை குழம்புது. நாலையும் யோசித்து, நீயே ஒரு முடிவுக்கு வா... எனக்கு நீங்க எல்லாரும் நல்லா சந்தோஷமாய் இருக்கணுங்கிறதுதான்.”
“நீங்க நினைக்கிறது மாதிரியே நடக்கும்.”
பார்வதி ஆனந்தப் பரவசமாக வெளியே வந்தாள். அப்போது, அத்தானைப் பார்க்க அங்கே வந்த இரண்டாவது அண்ணன் சுப்பையாவிடம் “அவரு... ராமனுக்கு, மல்லிகாவை கொடுக்க சம்மதிச்சுட்டாரு. பெரியண்ணன் போட்ட குறி பலித்துவிட்டது” என்றாள்.
சுப்பையா வெளியே ஓடினார். பெரியண்ணன் போட்ட குறி பலித்தால், அவர் எப்படி பெரிய மனிதனாவது? அவர் பொறுப்பில் கல்யாணம் நடக்க வேண்டாமா? அவரை ‘குள்ளப் பயலே’ என்று சொல்லி அடிக்கப் போன ராமனுக்கா மல்லிகா? கூடாதுய்யா கூடாது.
சுப்பையா ஓடினார். பெருமாள் வீட்டைப் பார்த்து ஓடினார்.
--------------
தொடரும்