Page 11 of 11
உதவவில்லை. ஆனால் அங்கே போவதற்காக அவள் வைத்திருந்த ஒன்றே ஒன்றுதான் அவளுக்கு உதவியது. தம்பியின் கைக்குட்டை!
இடுப்பில், இருப்பது தெரியாமல் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து, அவள், கண்களைத் துடைத்துக் கொண்டாள். அப்போதும் துக்கத்தைத் துடைக்க முடியாமல், தன் தொண்டையைப் பிடித்துக் கொண்டாள்.
மல்லிகா, தன்னை மறப்பதற்காக, அந்த ஏழைக் குடித்தனக்காரர்களை அதிகமாக நினைத்து, சேவையில் செயல்பட்டாள்.
ரமணனை, இரண்டு நாளாகக் காணவில்லை. அவளுக்கு, அது ஆச்சரியமாகவும், ஆனந்தமான ஆறுதலாகவும் இருந்தது.
--------------
தொடரும்