(Reading time: 6 - 12 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 35 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாயம் 36 -- பாங்குக் கொள்ளை!

  

போர்ட்டிகோவில் காருக்குப் பக்கத்தில் நின்ற இருவரும் கோவர்த்தனனுக்கு சல்யூட் செய்தனர்.

  

"என்ன விஷயம்?" என்றார் கோவர்த்தனன் வராந்தாவில் நின்று.

  

இருவரும் பாக்கெட்டுகளிலிருந்து அடையாளச் சீட்டுக்களை எடுத்து நீட்டியவாறே "ஸி.ஐ.டி." என்றனர்.

  

அடையாளச் சீட்டுக்களைப் பார்க்க அவசியமில்லை என்பது போல் கரம் அசைத்துவிட்டு, "என்ன வேணும்?" என்றார் கோவர்த்தனன்.

  

"கல்கத்தா சென்ட்ரல் ஜெயில்லேயிருந்து ஒரு கைதி 'எஸ்கேப்' ஆகிவிட்டான் ஸார்! சென்னைக்கு அவன் வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு ஃபோட்டோவும் மெஸ்ஸேஜும் அனுப்பி வைச்சாங்க. மெட்ராஸில் அலர்ட்டாகி அலசியதிலே இந்தப் பக்கம் அவன் வந்து தலைமறைவாகி யிருக்கலாம்னு துப்புக் கிடைச்சுது.

  

"ஸோ? அரெஸ்ட் வாரண்ட் வேணுமா? நாளைக்கு கோர்ட்டுக்கு வாங்க."

  

"நோ ஸார். ஏற்கனவே வாங்கி வைத்திருக்கிறோம்."

  

"பின்னே? ஆசாமியைக் கண்டுபிடிச்சீங்களா இல்லையா?

  

" இன்னும் இல்லை ஸார். போட்டோவைக் காட்டி விசாரிச்சுக்கிட்டு வருகிறோம். அவர்களில் சிலர்...."

  

"என்ன சொல்றாங்க?"

  

"அந்தப் படத்தைப் பார்த்தால் உங்களைப் போலவே இருப்பதாகச் சொன்னாங்க."

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.